முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ; மருத்துவர்களை சந்தித்தப்பின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ; மருத்துவர்களை சந்தித்தப்பின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேட்டி

புதன், அக்டோபர் 19,2016,

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.மேலும்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவே அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்களை சந்தித்தப் பிறகு வெளியே வந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார்.

அவருக்கு தொற்று நோய் பாதிப்பு ஏதும் தாக்காமலிருக்கவே, மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார்.