முதல்வர் ஜெயலலிதா குணமடைய கேதார்நாத் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தார் எம்.பி. தருண் விஜய்

முதல்வர் ஜெயலலிதா குணமடைய கேதார்நாத் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தார் எம்.பி. தருண் விஜய்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய12 ஜோதி லிங்கத் திருத்தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயிலில் இருந்து சிறப்பு பிரசாதம் கொண்டு வந்தார் பாஜக எம்.பி. தருண் விஜய்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக உத்தரகாண்ட்  மாநில பாஜ எம்.பி. தருண் விஜய் வந்தார். அப்போலோ மருத்துவமனையில் பாராளுமன்றத்துணைசபாநாயகர் தம்பிதுரையை சந்தித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பாஜக எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:”

முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்கள் குறித்து பாராளுமன்றத்துணைசபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்டறிந்தேன்,. முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார், என்று தெரிவித்தார், முதல்வர் நல்ல குணமடைந்து வருவதாகவும் வெகுவிரைவில் வீடு திரும்பி அவர் அரசு பணிகளை தொடர்வார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர், லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வருகிறார், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தருண் விஜய் தெரிவித்தார்.