முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு கோமாதா பூஜை

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு கோமாதா பூஜை

வியாழன் , அக்டோபர் 27,2016,

சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.அமைச்சர்களும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் தினசரி அப்பல்லோ மருத்துவமனை முன்பு நடைபெறுகிறது. அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தினம்தோறும் விதவிதமான பூஜைகள் நடத்தி வருகின்றனர். அதேபோல் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் குத்துவிளக்கு பூஜையில் தொடங்கி சாமியார்களின் சூலாயுத பூஜை வரை என தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பல்லோ முன்பு இன்று அதிமுகவினர், முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி  கோமாதா பூஜை நடத்தினர். தொண்டர்களும் மாலை அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.