முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் ; நடிகை சாரதா

முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் ; நடிகை சாரதா

வியாழன் , நவம்பர் 03,2016,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக நடிகை சாரதா கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகை சாரதா இன்று மருத்துவமனைக்கு வந்தார்.
முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் கூறியது ; மருத்துவமனைக்கு வரும் போது முதல்வரின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தத்துடன் வந்தேன். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைச் சந்திக்க முடிந்தது. தற்போது முதல்வர் நலமுடன் இருப்பதாகவும் பயப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. பல கோடி மக்கள் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார்.