முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. உட்பட பல்வேறு கட்சியினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த  சுயேச்சை எம்.எல்.ஏ. உட்பட பல்வேறு கட்சியினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

திங்கட்கிழமை, ஏப்ரல் 04, 2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரும் 2 குழுக்‍களாக நேரில் சந்தித்து தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துகொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று புதுச்சேரி மாநிலம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எம்.சி. சிவக்குமார்- என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்னாள் தலைவர் திரு. வையாபுரி மணிகண்டன், நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி ஓய்வு பெற்ற கூடுதல் செயலாளர், திரு. ஜி. பன்னீர்செல்வம்; தி.மு.க-வைச் சேர்ந்த முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதி திரு. ஜி. சுந்தரவடிவேலு, ராஜ்பவன் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் எல். ராமலிங்கம் ஆகியோரும்; தி.மு.க-வைச் சேர்ந்த புதுச்சேரி மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினரும், ஏம்பலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். இராஜாராமன், புதுச்சேரி மாநில தொ.மு.ச. செயலாளர் திரு. பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி மாநில ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க முன்னாள் துணைத் தலைவர் திரு. வி.சி. ஏழுமலை என்கிற காசிலிங்கம்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. P.M சரவணன், நிலவணிகம் உரிமையாளர் சங்க துணைத் தலைவரும், கள்ளக்குறிச்சி ஆர்.கே. சண்முகம் கலைக் கல்லூரி இயக்குநருமான திரு. T. கலியபெருமாள் ஆகியோரும், இரண்டு குழுக்களாக நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான திரு. எம்.சி. சம்பத், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. பெ. புருஷோத்தமன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்‍கு, கழகத்தில் இணைந்தவர்கள் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.