முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார் : அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்
திங்கள் , நவம்பர் 21,2016,
சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார், என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நேற்று முன்தினம் சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைந்ததன் அறிகுறியாக இந்த நிகழ்வை கருதும் அதிமுகவினர், அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே அதனை கொண்டாடி மகிழ்ந்தனர், இதற்கிடையே இடைத்தேர்தல் களத்தில் இருந்து அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் வாலாஜா கணேசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர், முதல்வர் ஜெயலலிதா பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அதிமுகவினர் நேற்று இரண்டாவது நாளாக கொண்டாடி இனிப்புகள் வழங்கினார், தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதை எடுத்துக்காட்டும்வகையில் அப்போலோ முன்பு 108 தேங்காய்கள் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.