முதலமைச்சர் ஜெயலலிதா 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் : அமைச்சர் சுந்தர்ராஜன் பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் : அமைச்சர் சுந்தர்ராஜன் பேச்சு

ஞாயிறு, மார்ச் 20,2016,

தொண்டி,

முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் என்று எஸ்.பி.பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சுந்தர்ராஜன் பேசினார்.

திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சர்புதீன், கூட்டுறவு சங்க தலைவர் ஹைதர் அலி, ஊராட்சி தலைவர் முகமது காசீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி, அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, தலைமை கழக பேச்சாளர் உசேன், தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியதாவது:– தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார். அ.தி.மு.க. என்பது யாராலும் தகர்க்க முடியாத இரும்புக்கோட்டை. ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு இந்த மாவட்டத்தின் மின் பற்றாக்குறையை போக்க திருவாடானை தாலுகா உப்பூரில் 12,788 கோடியில் புதிய மின் சக்தி திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதே போல் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு மைதானத்தை ராமநாதபுரத்தில் உருவாக்கி தந்துள்ளார். ஒரே ஆண்டில் மாவட்டத்தில் மூன்று கலை அறிவியல் கல்லூரியை தந்துள்ளார். இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை பெற்று உள்ளனர். வருகிற சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. 234 தொகுதியிலும் சிறப்பான வெற்றியை பெரும். இதற்கு அ.தி.மு.க.தொண்டர்கள் தயாராகி விட்டனர். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலன் அ.தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் தான் செய்ததாக எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். நாம் அனைவரும் என்றென்றும் முதல்–அமைச்சருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், ஜெயலலிதா பேரவை செயலாளர் செங்கை ராஜன்,இளைநரணி செயலாளர் பாண்டி, மாணவரணி செயலாளர் சண்முகநாதன், இளைனர் பாசறை செயலாளர் ராம்குமார், இலக்கிய அணி செயலாளர் விடுதலை முரசு, மாவட்ட பிரதிநிதி கடலரசன், ஓட்டுனர் அணி செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட வக்கீல்கள் அணி இணை செயலாளர் பவுல் மெல்கியூர், எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் கருப்பையா, அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வக்கீல் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் நந்திவர்மன், தொண்டி நகர் செயலாளர் பவுசுல் ஹக், ஊராட்சி தலைவர்கள் பிரேமா கணேசன், காளை, கருப்பையா, காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமன், மோகன், மகாலிங்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜன், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நூர் முகமது, நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முகமது நிஜார் நன்றி கூறினார்.