முதல்வர் நலமுடன் இருக்கிறார் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் ; நடிகர் செந்தில்

முதல்வர் நலமுடன் இருக்கிறார் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் ; நடிகர் செந்தில்

ஞாயிறு, அக்டோபர் 30,2016,

சென்னை : சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், முதல்வர் நலமுடன் இருப்பதால் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் என்றும் நடிகர் செந்தில் கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்  நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரிப்பதற்காக திரைப்பட நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, ஆனந்தராஜ் ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றனர்.

முதல்வரின் உடல்நலன் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மக்களின் பிராத்தனையின் காரணமாக தமிழக முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் முதல்வர் உடல் நலம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.