யாருக்கு எத்தனை தொகுதிகள்? தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக முன்னிலை

யாருக்கு எத்தனை தொகுதிகள்? தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக முன்னிலை

புதன், மே 18,2016,

தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 74.26% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டது.
தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் விபரம்:-

அதிமுக- 111 தொகுதிகள்

திமுக -99 தொகுதிகள்

பாட்டாளி மக்கள் கட்சி: 02 தொகுதிகள்

மக்கள் நல கூட்டணி: 03 தொகுதிகள்

பாரதீய ஜனதா :01 தொகுதிகள்,

இழுபறி: 16 தொகுதிகள்
அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்திடிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.