ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு
வியாழன் , மார்ச் 03,2016,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர். தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் உள்ள 7 பேரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இவர்களை விடுவிக்கும் முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.