ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூலை 01,2016,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. எம்.ஏ.முனியசாமி ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து  விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். டாக்டர் எம்.மணிகண்டன், ஏற்கெனவே வகித்து வரும் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆர்.கருப்புசாமி, முதுகுளத்தூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி. கே.ஹேமா, முதுகுளத்தூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. P, முருகேசன், கமுதி ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஏ.மீனாட்சிசுந்தரம் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கடலாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. எம்.சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. எம்.முருகன், கமுதி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.P.M.இக்பால், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஏ.ஜெயச்சந்திரன், சாயல்குடி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. வி.சுப்பிரமணியன் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றின் புதிய நிர்வாகிகளையும் நியமித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக, பரமக்குடி நகர மன்ற 33-வது வார்டு உறுப்பினர் திரு. எம்.ஏ.முனியசாமியும், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.முருகனும், கமுதி ஒன்றியக் கழக செயலாளராக, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரான திரு. எஸ்.பி.காளிமுத்தும், கடலாடி ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிசெயலாளராக, ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளரான திரு. B.சரவணனும் நியமிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதேபோல், கமுதி பேரூராட்சி கழக செயலாளராக, கமுதி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளருமான திரு. V.K.G. முத்துராமலிங்கமும், பேரூராட்சி துணைச் செயலாளராக, திரு. எஸ்.சுப்பிரமணியனும், சாயல்குடி பேரூராட்சிக் கழக செயலாளராக, பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரான திரு. எஸ்.சரீபுவையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.