வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வியாழன் , ஜூன் 09,2016,

வறுமையில் வாடும் பழம் பெரும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவரும், இசையமைப்பாளருமான தேவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திரைப்பட இசையமைப்பாளர் கோவர்தனின் வறுமை நிலையினை மனதில் கொண்டு, தாயுள்ளத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இசை குடும்பத்தினர் மீது எந்த அளவுக்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது.இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசை குடும்பங்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தேவா கூறியிருக்கிறார்.