”விடூர்” அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

”விடூர்” அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

புதன், ஜனவரி 20,2016,

விழுப்புரம் மாவட்டம் ”விடூர்” அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீா் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 20.ம்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையின்கீழ் உள்ள 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.