வில்லிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதல்

வில்லிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016,

சென்னை வில்லிவாக்கம் பகுதியில், வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. வட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு. தாடி ம. ராசுவுக்கு ஆதரவாக, கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க. வட்டச் செயலாளர் சிட்கோ சேகர் உள்ளிட்ட தி.மு.க.வினர், அ.இ.அ.தி.மு.க.வினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயமடைந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் திரு. வடிவேலு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தி.மு.க.வினரின் தாக்குதலால் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.இ.அ.தி.மு.க.வினரை, கழக வேட்பாளர் திரு. தாடி ம. ராசு, நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. வட்டச் செயலாளர் சிட்கோ சேகர் உள்ளிட்டோர் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில், அ.இ.அ.தி.மு.க. பகுதி செயலாளர் திரு. காளிதாஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.