விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

ஞாயிறு, டிசம்பர் 20,2015,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு 20-12-2015 (இன்று) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி மற்றும் ஈரோடு வட்டத்தில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.