16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017,

சென்னை  – தமிழக சட்டசபை வரும் 16-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இது குறித்து தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 (1)-ன் கீழ், பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கீழ் அடுத்த கூட்டத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி காலை 10-30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கவர்னர் கூட்டியுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181(1) கீழ் 2017-18-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் நாள் வியாழக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும் 2017-18-ம் ஆண்டிற்கான முன்பண மானியக்கோரிக்கைகள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் நாள் பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார்.

இவ்வாறு சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.