184 வட்டார சுகாதார புள்ளியிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

184 வட்டார சுகாதார புள்ளியிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை ,27 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 184 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு,  தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென அமைக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 21,023 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது 184 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், குடும்ப நல இயக்குநர் ஜோதி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) இயக்குநர் எம்.ஆர்.இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.