20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016,

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிற்சாலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த தொழிலாளர்களுக்கு 8,400 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா 20 சதவீத போனஸ் வழங்க உத்தரவிட்டார். இதன்படி, ஒவ்வொரு தொழிலாளிக்கும் 14,800 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேயிலைதோட்ட கழக தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.