2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

சனி, அக்டோபர் 22,2016,

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு, அரிய தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

www.tn.gov.in\ta\forms\teptmam\1 என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை ஆதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.