4 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துக்கூறி,அ.தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம்

4 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துக்கூறி,அ.தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம்

வியாழன் , நவம்பர் 03,2016,

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணற்ற சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு.P. தங்கமணி, திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், திரு. கே.சி. கருப்பணன், திரு. D.ஜெயகுமார், திரு.K.P. அன்பழகன், திரு. பாலகிருஷ்ணரெட்டி, டாக்டர் வி. சரோஜா, திரு.கே.சி. வீரமணி, திரு. சேவூர் எஸ்.ராமசந்திரன், டாக்டர் நிலோபர் கபில், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் கழக வேட்பாளர் திரு.A.K. போஸை ஆதரித்து, நல்லூர், ஆனைக்குளம், பாப்பான்குளம், சோளங்குருணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினர் வீதி வீதியாகச் சென்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

தஞ்சை 14-வது வார்டுக்குட்பட்ட பழைய மீன் மார்க்கெட், ஆட்டுமந்தை தெரு, ராவுத்தர்பாளையம், நெல்லுமண்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி, கழக வேட்பாளர் திரு. என். ரங்கசாமியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழக தேர்தல் பொறுப்பாளர் திரு. ஆர். வைத்திலிங்கம் எம்.பி. சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி V. ஜெயராமன் உள்ளிட்டோரும் வாக்கு சேரித்தனர்.

தஞ்சை 43-வது வார்டுக்கு உட்பட்ட பூக்காரத்தெரு, கள்ளுக்குளம், வடக்கு தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், அமைச்சர் திரு. காமராஜ், கழக நிர்வாகிகள் ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நீலகிரி ஊராட்சிப் பகுதியில் திருவேங்கடம் நகர், லட்சுமி நகர், திருவள்ளுவர் நகர், அழகம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. என். ரங்கசாமியை ஆதரித்து திரு. பா. குமார் எம்.பி. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி என். நடராஜன், திருமதி எஸ். வளர்மதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரளான கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பகுதியில் மேம்பாலம், பழைய மாவட்ட ஆட்சியர் சாலை, ஆத்துப்பாலம் உள்ளிட்ட இடங்களில் கழக வேட்பாளர் திரு. என். ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

தஞ்சை மாதாகோட்டை பகுதியில் அப்பாவு நகர், அண்ணாநகர், முருகராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் திரு.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திரு.S.P.வேலுமணி, திரு.ஆர்.காமராஜ், திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.துரைக்கண்ணு மற்றும் அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி என்.நடராஜன், திருமதி எஸ்.வளர்மதி, அரசு தலைமை கொறடா திரு. தாமரை எஸ்.ராஜேந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி, வாக்கு சேகரித்து, கழக வேட்பாளரை அமோக வெற்றிபெறச் செய்வது என இக்கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வெண்ணிலாநகர், சத்யாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகரை ஆதரித்து அமைச்சர்கள் திரு. C.Ve. சண்முகம், திரு. எம்.சி. சம்பத், திரு. செ.செம்மலை, எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் திரு. புருஷோத்தமன், கழக சட்டமன்றக் குழு தலைவர் திரு. A.அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் தமிழக-புதுச்சேரி கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.