விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம் ரத்து

விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம்  ரத்து

புதன், ஏப்ரல் 20,2016, விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம், திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தங்க.ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தங்க.ஆனந்தனை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். இந்த நிலையில், தங்க.ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கடலூர் மேற்கு மாவட்ட

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

புதன், ஏப்ரல் 20,2016, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றக்கோரி பாளையங்கோட் டையில் அவரது உருவ பொம் மையை எரித்தும், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டும் திமுகவில் ஒரு தரப்பினர் போராட் டம் நடத்தியிருந்தனர். திமுக நிர்வாகி சிவன் என்பவர் வண்ணார்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலப்பா ளையத்தில் மைதீன்கான் அலுவ லகத்தையும் பெண்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில்

சேலத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா 16 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

சேலத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா 16 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

புதன், ஏப்ரல் 20,2016, சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் இன்று மாலை 3 மணியளவில் மகுடஞ்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் வாரணவாசியில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட

தேர்தல் விதிகளை மீறி தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கனிமொழி பிரச்சாரம் : போக்குவரத்து கடும் பாதிப்பு

தேர்தல் விதிகளை மீறி தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கனிமொழி பிரச்சாரம் : போக்குவரத்து கடும் பாதிப்பு

செவ்வாய், ஏப்ரல் 19,2016, சேலம் மாவட்டம் கெங்கவல்லி திமுக வேட்பாளரை ஆதரித்து  தேர்தல் விதிகளை மீறி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.    சேலம் மாவட்டம் கெங்கவல்லி தனி தொகுதியில், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷனி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.   இவரை ஆதரித்து நேற்றிரவு கனிமொழி எம்பி, ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி

தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை

தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை

செவ்வாய், ஏப்ரல் 19,2016, உள்கட்சி ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி என மார்தட்டிக் கொண்டிருக்கும் திமுகவின் வாரிசு அரசியல் அனைவரும் அறிந்ததுதான். அதிலும், முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக தலைமையால் நியமிக்கப்பட்டார் என். பெரியசாமி.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் சிரமம் ஏதுமில்லை : பலமுறை எளிதில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் சிரமம் ஏதுமில்லை :  பலமுறை எளிதில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

செவ்வாய், ஏப்ரல் 19,2016,  தமிழகத்தில் அரசு திட்டங்கள் குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் தெரிவித்திருந்த புகாரில் உண்மை இல்லை என, மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில், பாஜக தலைமையகத்தில் நேற்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது