சனி, பெப்ரவரி 27,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா,
மாநகராட்சி பட்ஜெட்டில் வரி உயர்வு இல்லை பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
சனி, பெப்ரவரி 27,2016, பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சொத்து வரி, தொழில் வரி, முத்திரைத்தாள் வரி, கேளிக்கை வரி ஆகியவை உயர்த்தப்படவில்லை. பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றால் ரூ.10 ஆயிரமும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், 12-ம் வகுப்பு மாணவர்கள் ஏதேனும் 3 பாடங்களில் 600-க்கு 595 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றால்
234 தொகுதிகளிலும் சரித்திரம் படைக்கும் வெற்றியுடன்‘முதல்வராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார்’ ‘பட்ஜெட்’ கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேச்சு
சனி, பெப்ரவரி 27,2016, 234 தொகுதிகளிலும் வெற்றியுடன் சரித்திரம் படைத்து முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டினார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்(2016-17) கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்றக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் டாக்டர் சந்திரமோகன், துணை மேயர் பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து காலை 9.35
அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அ.தி.மு.க.தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை
சனி, பெப்ரவரி 27,2016, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் அதிமுகவின் தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 164 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- இந்த திருமண நிகழ்ச்சியில் இல்லறம் ஏற்கின்ற மணமக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 68 வகையான சீர்வரிசைப் பொருட்களும் கிராமப்புற
மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி : முதல்வரிடம் அரசு தலைமை வழக்கறிஞர் வழங்கினார்
சனி, பெப்ரவரி 27,2016, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.18 கோடி வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி , தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள், சென்னை
மாநகராட்சி பட்ஜெட்டில் வரி உயர்வு இல்லை பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
வெள்ள பாதிப்பு குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணிக்கு சம்மன் : சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு
சனி, பெப்ரவரி 27,2016, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சென்னை செசன்சு கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் விஜயகாந்த் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி 3-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் ஏற்பட்ட