ஞாயிறு, ஜனவரி 10,2016, 10- மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா-வங்கி மற்றும் தீர்வு புத்தகங்களுக்கு மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் மத்தியிலும் மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து, மாணவ-மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு
அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: சாலை பாதுகாப்புக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்
ஞாயிறு, ஜனவரி 10,2016, 27-வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா, இன்று முதல் 16-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். விபத்தில்லா சாலை பயணம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பு நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமிழக அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அனைவரும் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி, பயணம் விபத்தில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, 27-வது
சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு : நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
ஞாயிறு, ஜனவரி 10,2016, 2016 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, நியூஸ்7 தொலைக்காட்சி, லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிற ரீதியில் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று 42.13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி வசதியாகச் செல்ல, நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயணிகள் நன்றி
ஞாயிறு, ஜனவரி 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும், 9-ம் தேதிமுதல் 14-ம் தேதிவரை 12,624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த
முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த விலையில்லா வேட்டி-சேலை திட்டம் : தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு வழங்கும் பணி தீவிரம்
ஞாயிறு, ஜனவரி 10,2016, பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த, விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு தொடர்ந்து வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 59 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல், ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில், நியாயவிலைக்கடை மூலம் 92
மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள்விழா: அரசு விழாவாக கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
ஞாயிறு, ஜனவரி 10,2016, சென்னை : தைப்பூசத் திருநாளான வரும் 24-ம் தேதி மன்னர் திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் மதுரையில் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவி்த்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் மணிமண்டபங்களை எனது தலைமையிலான
முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த சிறப்பு பொங்கல் பரிசு:திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது
ஞாயிறு, ஜனவரி 10,2016, திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த சிறப்பு பொங்கல் பரிசு 5 லட்சத்து 3 ஆயிரத்து 372 ரேஷன்கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த காக்களூர் சாலையில் அமைந்துள்ள மா.பொ.சி. நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன்கடையில் தமிழக முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க ரேஷன்கார்டு தாரர்களுக்கு சிறப்பு பொங்கல்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமை
ஜல்லிக்கட்டு போட்டி பிரச்சினை:முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்
ஞாயிறு, ஜனவரி 10,2016, ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்க முடியாத வகையில், சுப்ரீம் கோர்ட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சி காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வரும் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்படலாம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
சனி, ஜனவரி 09,2016, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் படி தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள்
அமராவதி அணையில் இன்று முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும்
சனி, ஜனவரி 09,2016, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் கால அளவு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பு செய்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும்