செவ்வாய், ஜனவரி 05,2016, கனமழை காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தலைமையிலான மத்திய குழு, இரண்டாம் கட்டமாக சென்னை வந்துள்ளது. இக்குழு, பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு செய்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது முதல் மூன்று கட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்து தேவையான நிதியை வழங்குவதற்காக,
விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரம் பேருக்கு விலையில்லா வேட்டி,சேலைகள்:அமைச்சர் ப.மோகன் வழங்கினார்
செவ்வாய், ஜனவரி 05,2016, விழுப்புரம் மாவட்டத்தில் 13,887 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி,சேலைகளை சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டங்களில் கலெக்டர் எம்.லட்சுமி தலைமையில் அமைச்சர் ப.மோகன் வழங்கினார் விழுப்புரம் மாவட்டம் வடக்கனந்தல் மற்றும் சங்கராபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களையும், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ– மாணவிகள் பொதுத் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற கற்றல் கையேடுகளையும் அவர் வழங்கினார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்
செவ்வாய், ஜனவரி 05,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி. செந்தமிழன் எம்.எல்.ஏ., திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். தென்சென்னை தெற்கு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க ரூ.10 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
செவ்வாய், ஜனவரி 05,2016, சென்னை,தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனைக்கும் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. மழை வெள்ளத்தால்
கன மழையினால், பாதிக்கப்பட்ட 14 லட்சம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக ரூ 700 கோடிநிவாரண நிதி உதவி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
திங்கள் , ஜனவரி 04,2016, தமிழகத்தில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவித்தொகையாக 700 கோடி ரூபாயை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார். மீதமுள்ள நிவாரணத் தொகை, வரும் 11-ம் தேதிக்குள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை காலம் என்பது அக்டோபர் மாதம் முதல் நாள் முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை என
திருவையாறில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
திங்கட்கிழமை, ஜனவரி 04, 2016 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். ஏழை-எளியோருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தனையில் உதித்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்ட அரசு
சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் பரிசு
திங்கள் , ஜனவரி 04,2016, சென்னை : பெல்ஜியம் நாட்டில் கடந்த அக்டோபர் 18 ம்தேதி நடைபெற்ற உலக அளவிலான 18வது பிளமிஸ் ஓபன் வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக முதல்வர் ஜெயலலிதா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகைசூட ஏதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
திங்கள் , ஜனவரி 04,2016, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.326.85 கோடி செலவு ஏற்படும். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ்-சிறப்பு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
தமிழகத்தில் ரூ.2,560 கோடி மதிப்பில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
திங்கள் , ஜனவரி 04,2016, சென்னை : 2559 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டங்கள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு, எல்.இ.டி. தெருவிளக்குகள், அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் – வேலூர் மாநகராட்சி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி,
வெள்ளத்தால் சேதமடைந்த எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இல்லத்தையும், பள்ளிகள் சீரமைப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்கும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
திங்கள் , ஜனவரி 04,2016, சென்னை;சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இல்லத்தையும், அங்குள்ள பள்ளியையும் சீர்செய்ய தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும்