புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017, கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வைகோ கூறுகையில்,தமிழகத்தில் நிலவிய அரசியல் பரபரப்பு சம்பவங்கள் குறித்து மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமானது. முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் விலகலுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியை அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக முதலில் குற்றம்சுமத்தியவர் மு.க.ஸ்டாலின். பின்னர்,
அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அதிமுக ஆட்சிக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுக சதித் திட்டம் ; வைகோ குற்றச்சாட்டு
தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ செம்மலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு : தோளில் சுமந்து கொண்டாட்டம்
புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017, ஓமலுார் : சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு சென்ற எம்.எல்.ஏ செம்மலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.சிறப்பான வரவேற்பு அளித்த, அ.தி.மு.க.,வினர், அவரை, தோளில் சுமந்து ஊர்வலம் சென்றனர். பன்னீர்செல்வம் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் சொந்த தொகுதிக்கு செல்லத் துவங்கி உள்ளனர். அவர்களை, கட்சியினர் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., செம்மலை, நேற்று காலை, ஓமலுாருக்கு வந்தார். அப்போது, பன்னீர்செல்வம் மற்றும் தீபா ஆதரவாளர்கள் பலர்,
விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017, சென்னை : தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2247 கோடி வறட்சி நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இயற்கை இன்னல்களான வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை உடனுக்குடன் மேற்கொள்வதில், தமிழக அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அக்டோபர்
தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017, சென்னை ; தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் மே14–ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 2 கட்டமாக தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக் கீடு வழங்கவில்லை என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி
அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பேதே திமுகவின் ஒரே குறிக்கோள் : பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றாச்சாட்டு
வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்தத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் இரண்டு பிரச்னைகளை வைத்தனர். ஒன்று பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று பேரவையை ஒத்திவைத்து ஒரு வாரம் கழித்து நடத்த வேண்டும் என்பதாகும். ரகசிய