மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை,  சென்னை : தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை

பேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி : பேரறிவாளன் நன்றிக் கடிதம்

பேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி : பேரறிவாளன் நன்றிக் கடிதம்

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை: பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள். ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் அளித்துள்ளது.இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அவரை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துபேசி வருகின்றனர். இதனிடையே சென்னை தலைமை

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை,   சென்னை : செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி (செப்டம்பர் 12) அன்று வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிவி தினகரன் கூறியிருப்பதாவது:- பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை

அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆகஸ்ட் 31, 2017 ,வியாழக்கிழமை, சென்னை : வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் அஞ்சல் தலையை வெளியிட, அதனை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு, முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு அர்ஜுனா விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடையூறுகளைத் தாண்டி வெற்றிகள் பல பெற்று சாதனை படைக்க

காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இன்று வண்டலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்

கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

ஆகஸ்ட் 29, 2017 ,செவ்வாய்க்கிழமை,  மதுரை : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், கட்சிக்கு சசிகலாவையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 8 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மட்டும் மேலூரில் நடந்த டிடிவி. தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. அவரையும், மேலும், 2 எம்எல்ஏ-க்களையும் உள்ளூர் அமைச்சர் ஒருவர் கடத்தியதாக மேலூர் பொதுக்கூட்ட மேடையிலேயே டிடிவி. தினகரன்

தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்

தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்

ஆகஸ்ட் 28, 2017 ,திங்கட்கிழமை, சென்னை : தினகரனின் நியமன அறிவிப்புகள் செல்லாது என்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடும், ஜெயா டி.வி.யும் செயல்படுவதை உறுதி செய்ய சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன்

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆகஸ்ட் 27 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, தேனி : ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது. கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தேனியில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:- ”இன்றைக்கு நடைபெறுவது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம். 122 எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவானவர்கள்தான். பதவிக்காகவே ஒருசிலர் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்; வேறு எந்த பயத்தினாலோ

கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது : அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்

கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது : அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொது செயலாளர்  டிடிவி தினகரன்

ஆகஸ்ட் 26 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : “கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது என அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து,