செவ்வாய், ஜூன் 21,2016, சென்னை, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரி தலைமைக் காவலர் முனுசாமியின் உயரிய தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது மகளின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணமே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு
செவ்வாய்கிழமை, ஜூன் 21, 2016, சென்னை : கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. வே காரணம். மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் தி.மு.க.வே காரணம் என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இது தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது தி.மு.க துணையாக இருக்காதது ஏன் என்றும், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை அருகே அமையவுள்ள துணைக்கோள் நகரத்தினை தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு
திங்கள் , ஜூன் 20,2016, திருமங்கலம் ; தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் பகுதியில் ரூ.218.77கோடி மதிப்பீட்டிலான துணைக்கோள் நகரம் அமையவுள்ள இடத்தினை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வரும் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் இயற்கையான சூழலில் வசித்திட ஏதுவாக தமிழக
500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு
திங்கள் , ஜூன் 20,2016, நாகர்கோவில்; தமிழகத்தில் 500 டாஸ் மாக் மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். பாராட்டுதற்குரியது. அதே நேரத்தில் பூரண மதுவிலக்கை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது
500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் பாராட்டு
திங்கள் , ஜூன் 20,2016, சென்னை: பூரண மது விலக்கு இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாக கூறியுள்ள சரத்குமார் 30 நாட்களுக்குள் 500 மதுக்கடைகளை மூடிய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் அறிக்கை வருமாறு: கடந்த மே 24 ஆம் தேதி முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்து உத்தரவிட்ட முதலமைச்சர் அடுத்த
500 மதுபான கடைகளை மூடுவதற்கும்,பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் பாராட்டு
ஞாயிறு, ஜூன் 19,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, 500 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டன. மூடிய கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக மாற்று பணியிடங்கள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6-வது முறையாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பயிர்கடன் ரத்து, 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், டாஸ்மாக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 5 உத்தரவுக்கான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். பூரண மதுவிலக்கை ஏய்தும்
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்
ஞாயிறு, ஜூன் 19,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. இதற்கான அரசாணை நேற்று வெளியானது. மூடப்படும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட் -அவுட்டுகள் இல்லை,முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் பாராட்டு
ஞாயிறு, ஜூன் 19,2016, பொதுவாக அரசியல் விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் விழாக்களாக இருந்தாலும் சரி, கோவில் விழாக்களாக இருந்தாலும் சரி அண்மை காலங்களில் எங்கு பார்த்தாலும் ‘கட்-அவுட்டுகள்’ வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற விழாவின் போது முதன் முதலில் ‘கட்- அவுட்டுக்கு கெட் அவுட்’ சொல்லப்பட்டது. அதே போன்று, நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும் : அ.தி.மு.க செயற்குழுவில் தீர்மானம்
ஞாயிறு, ஜூன் 19,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின் படியும், மேலான ஆணையின் படியும் செயல்பட்டு, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டித்தர சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுவில் சூளுரை ஏற்கப்பட்டு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- அ.தி.மு.க 32 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்
சனி, ஜூன் 18,2016, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹிலாரிக்கு முதல்வர் ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு, நான் தெரிவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், தாங்கள் முதல்