தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல்  தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, ஜூன் 10,2016, தமிழகத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 4 முதல் 6 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 20 மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதேபோல் புதன்கிழமையும் மழை பெய்தது. அன்று 6.5

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு : புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு : புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

வியாழன் , ஜூன் 09,2016, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. தலைமைக்கழக புதிய நிர்வாகிகள்  பட்டியலை  முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அ. தி.மு.க. தலைமைக் கழகநிர்வாகிகள் பட்டியல் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. 1. ஜெ.ஜெயலலிதா(அ.தி.மு.க. பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதல்வர்) 2. இ.மதுசூதனன் (கழக அவைத்தலைவர்). 3. ஓ.பன்னீர்செல்வம்(அ.தி.மு.க  பொருளாளர், நிதி, ஊழியர்மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர்).

வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வறுமையில் வாடும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேவா நன்றி

வியாழன் , ஜூன் 09,2016, வறுமையில் வாடும் பழம் பெரும் இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவரும், இசையமைப்பாளருமான தேவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திரைப்பட இசையமைப்பாளர் கோவர்தனின் வறுமை நிலையினை மனதில் கொண்டு, தாயுள்ளத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி

இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : அவரது செவித்திறன் குறைபாட்டை நீக்க உரிய சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி வழங்கவும் உத்தரவு

இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : அவரது செவித்திறன் குறைபாட்டை நீக்க உரிய சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி வழங்கவும்  உத்தரவு

வியாழன் , ஜூன் 09,2016, சென்னை : வறுமையில் வாடும் 88 வயது, பிரபல இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செவித்திறனுக்காக காதொலிக்கருவி வழங்கவும் மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரபல இசையமைப்பாளர் கோவர்தன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார். தற்போது தனது மனைவியுடன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் இடையே மோதல் : அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் இடையே மோதல் : அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு

செவ்வாய், ஜூன் 07,2016, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், சமீபத்தில் இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கும் பஞ்சம் இல்லை, தலைவர்களுக்கும் பஞ்சம் இல்லை. தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு தொண்டர் கூட்டத்தை வைத்துக்கொண்டு கட்சிக்குள் கட்சி நடத்தி வருகின்றனர்.   சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி

பாராளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு : இரு அவைகளிலும் 3-வது பெரிய கட்சிக்கான அந்தஸ்தை பெற்றது அ.இ.அ.தி.மு.க.

பாராளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு : இரு அவைகளிலும் 3-வது பெரிய கட்சிக்கான அந்தஸ்தை பெற்றது அ.இ.அ.தி.மு.க.

செவ்வாய், ஜூன் 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க., நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களுடன் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்தது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில், 4 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களுடன் சேர்த்து

கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் தொடக்கம் : கால்நடை வளர்ப்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் தொடக்கம் : கால்நடை வளர்ப்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

செவ்வாய், ஜூன் 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தமிழக அரசு மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, கால்நடைத்துறை மண்டல துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு திட்ட துவக்க விழா நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அரசு மானியத்துடன் கால்நடைத்துறை மூலம் கால்நடைகளுக்கு இந்த காப்பீடு செய்து தரப்படுகிறது. வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்

ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் : தொகுதி மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஆர். கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் : தொகுதி மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி

செவ்வாய், ஜூன் 07,2016, சென்னை:தமிழகத்திலேயே, ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதி ஆக்குவேன் என்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க வெற்றி பெற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளப்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு

செவ்வாய், ஜூன் 07,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா வருகையை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி விழாக்கோலம் பூண்டது.  தொகுதிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி எழுச்சி மிகுந்த வரவேற்பளித்தனர். தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா தனக்கு மகத்தான வெற்றி தேடி தந்த ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றி கூறுவதற்காக  போயஸ்கார்டனில் இருந்து நேற்று மாலை 5-30 மணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழியெங்கு்ம் ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். போயஸ்கார்டனில் இருந்து ராதாகிருஷ்ணன்

பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இஸ்லாமியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  இஸ்லாமியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜூன் 06,2016, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் அரிசியை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்க உத்தரவிட்டுள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க 159 பள்ளிவாசல்களுக்கு 250 டன் பச்சரிசி வழங்கப்பட்டது. இதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் நன்றி