முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

ஞாயிறு, மே 22,2016, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் (பெப்சி) ஆகிய திரைப்பட சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ‘மக்களுக்காக நான்!! மக்களால் நான்!’ என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் தன்னிகரில்லா அரிதி பெரும்பான்மையான வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணை ஏறும் ஜெயலலிதா அவர்களுக்கும் மற்றும் அதிமுக

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக செம்மலை நியமனம்

தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக செம்மலை நியமனம்

ஞாயிறு, மே 22,2016, சென்னை: தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக மேட்டூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். செம்மலை வருகிற திங்கள்கிழமை (23 ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா முன்பு தாற்காலிக சபாநாயகராகப் பதவியேற்று கொள்வார் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.    

தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

ஞாயிறு, மே 22,2016, புதுடெல்லி – தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.  இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தே.மு.தி.க. 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தே.மு.தி.க.வின் மாநிலக்

28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு

28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு

ஞாயிறு, மே 22,2016, முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். 28 புதிய தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்; ஓ.பன்னீர்செல்வம்  வயது : 65  படிப்பு : பி.ஏ.,  ஊர் : பெரியகுளம்  குடும்பம் : மனைவி விஜயலட்சுமி,  மகன்கள்: ரவீந்திரநாத்குமார்,  ஜெயபிரதீப், மகள்: கவிதா  பதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், 2001இல் வருவாய் துறை அமைச்சர்,2001 முதல் 2002 வரை முதல்வர், 2002 முதல் 2006 பொதுப் பணித்துறை மற்றும்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

ஞாயிறு, மே 22,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும்  பொதுமக்கள் பார்க்க செய்தித்துறை மின்னணு திரைவாகனங்களின் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவுடன்    28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 19ம்தேதி  நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தனித்து போட்டியிட்ட அதிமுக இதுவரை இல்லாதவகையில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நாளை மீண்டும்

மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஞாயிறு, மே 22,2016, சென்னை;நான் என்றும் மக்கள் பக்கம் மக்கள் என்றும் என் பக்கம் தான் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்றும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.விற்கு வழங்கியுள்ளார்கள். நான் என்றும் மக்கள் பக்கம் தான்;

அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்

அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்

சனி, மே 21,2016, சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.இதில் 14 பேர் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்; 01. முதலமைச்சர் – ஜெயலலிதா – பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 02. நிதி அமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம் 03. வனத்துறை – திண்டுக்கல் சீனிவாசன் 04. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித்துறை 05.

ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

சனி, மே 21,2016, சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். தமிழகத்தில் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், கட்சியின் தலைமை

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனி, மே 21,2016, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பண விநியோக விவாகரம் எழுந்ததையடுத்து 16-ம் தேதி நடைபெற வேண்டிய வாக்குப்பதிவு மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது ஜூன் 13-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியை விரைவில் அறிவிப்பதாக

மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் : முதல்வர் ஜெயலலிதா

மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் : முதல்வர் ஜெயலலிதா

சனி, மே 21,2016, தமிழகத்தில் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு செயல்படுத்தியது. அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா