தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, மார்ச் 04,2016, நாகை, கோடியக்கரையின் 8 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நாகை, வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தற்போது 8 மீனவர்களை சிறைபிடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம்

385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், அல்ட்ரா சோனோகிராம், இசிஜி ஊடுகதிர் இயந்திரம், செமி ஆட்டோ அனலைசர் உள்ளிட்ட நவீன மருத்துவக் கருவிகளுடன் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இவற்றில் 5 மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில்

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016, ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 44 தமிழக மீனவர்கள் புது வாழ்வு தொடங்க  தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 44 தமிழக மீனவர்கள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

வியாழக்கிழமை, மார்ச் 03, 2016, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, மனித நேய நடவடிக்கை என, தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , மார்ச் 03,2016, மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்கார்ஃப் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சாரதா மேனனுக்கு இந்த ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றில்

அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

வியாழன் , மார்ச் 03,2016, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ கீழ் செவ்வாய்க்கிழமை 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனை: தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பிணவறை, புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

வியாழன் , மார்ச் 03,2016, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். 7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, கடந்த, 18 ஆண்டுகளாக நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வருகிறோம். இனியும், அந்த கூட்டணியிலேயே, தொடர்ந்து இணைந்திருப்போம்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பொருளாதாரத்தில் தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளில் மட்டும், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, 86 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு

அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்த நடைபெறவுள்ள 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என புவனகிரியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம். அதனடிப்படையில் ஏப்ரல் முகல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். இப்பிரசாரம் எனது தலைமையில் 50 பேர் கொண்ட பிரசாரக்குழு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின்

605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 02,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், அரசு அலுவலர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்தார். பணிமூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று