புதன், மார்ச் 02,2016, பாளையங்கோட்டையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நெல்லை சீமையில் வெள்ளையரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் முதன்மை படைத் தலைவராக இருந்தவரும், நெற்கட்டும் செவல் பாளையத்திலும் மற்றும் வெள்ளையருக்கு எதிரான பல போர்களிலும் வீரப்போர் புரிந்தவரும், பூலித்தேவன் மறைவுக்குப் பிறகும் விடுதலைப் போரை தொடர்ந்து
பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
புதன், மார்ச் 02,2016, உடல் நலக்குறைவு, சாலை விபத்து, மின்சாரம் தாக்கி என பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தமிழ்செல்வன்; நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜெ.நேரு; திருநெல்வேலி
ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
புதன், மார்ச் 02,2016, போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர்வாரியம் உள்ளிட்ட துறைகளில் நிறைவடைந்துள்ள ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று சில திட்டங்களை தொடங்கிவைத்ததுடன் சில பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் நேரில் வழங்கினார். நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை, குடிசை மாற்று வாரியம், அரசு போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது தனியார் நாளிதழ் பரபரப்பு குற்றச்சாட்டு:கைது செய்ய ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதன், மார்ச் 02,2016, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல 1,000 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்ததாக, Pioneer நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்த பணத்தை, லண்டன், துபாய், தென்னாப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் Pioneer
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
புதன், மார்ச் 02,2016, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் இதற்கான விழா நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரம்: சென்னை பார்த்தசாரதி நகர் திட்டப் பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து திட்டப் பகுதியில் 392 குடியிருப்புகள், நேரு பார்க் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள், லாக் நகர் திட்டப் பகுதியில் 304 குடியிருப்புகள், அண்டிமான்ய
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
புதன், மார்ச் 02,2016, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் சிறு,
109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்
செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை, தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பணிமனைகளை திறந்து வைத்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 12
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்
செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், 10 கோடி ரூபாய் செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், 207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 21 கோடியே 11
குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்
செவ்வாய், மார்ச் 01,2016, குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி குறைந்த கட்டணத்தில் இணைய
சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நடமாடும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, அமோனியா, ஒசோன்,