திங்கள் , பெப்ரவரி 29,2016, இரு வாரங்களில் புதிய கட்சியைத் தொடங்கி, 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார் நாடார் பேரவை மாநிலத் தலைவரும், நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எர்ணாவூர் ஏ.நாராயணன். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு நாடார் பேரவை நிர்வாகிகளையும், எனது ஆதரவாளர்களையும் மாவட்டம்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 ஜோடிகளுக்கு 68 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்
திங்கள் , பெப்ரவரி 29,2016, மதுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பாண்டிகோயில் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய
காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு நன்றி
திங்கள் , பெப்ரவரி 29,2016, பாவூர்சத்திரம்; ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் போராட்டக்குழு ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் நடந்தது. ராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், திட்டப்பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று போராட்டகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டக்குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் தனராஜ், துணை செயலாளர் செல்வராஜ், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமஉதயசூரியன்
சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
திங்கள் , பெப்ரவரி 29,2016, தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க அரசியல் விழிப்புணர்வு மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு
திங்கள் , பெப்ரவரி 29,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில், விசுவகுடி அருகில் கல்லாறு ஓடையின் குறுக்கே 33 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக
தமது தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது :முதல்வர் ஜெயலலிதா பேருரை
திங்கள் , பெப்ரவரி 29,2016, கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்துப் பிரிவினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும் விதமாக இந்தத் திட்டங்கள் உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சென்னையில் உள்ள தனது தொகுதியான ராதாகிருஷ்ணன் நகரில் (ஆர்.கே.நகர்) அவர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ரூ.180.41 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, காவலர் குடியிருப்புகள், அரசு கலை-அறிவியல் கல்லூரி, அம்மா
தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது: ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்றும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார். மேலும் முதல்வர் கூறுகையில், தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
நாட்டை ஆள தகுதியான நபர் யார்? : முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை
ஞாயிறு, பெப்ரவரி 28,2016, தன் நலன், தன் குடும்ப நலன் பாராது உழைப்பவரே நாட்டை ஆளுவதற்கு தகுதியான நபர் என முதல்வர் ஜெயலலிதா குட்டி கதை மூலம் விளக்கிக் கூறினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை: ஓரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார். அதில் பல
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா!
ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்று உணர்ச்சி பொங்க கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறவேன். இத்தொகுதியைச் சார்ந்த மக்களும் எனது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள். என்னை தமிழ்நாடு
4 மாவட்டங்களுக்கு அதிநவீன பிரச்சார வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
ஞாயிறு, பெப்ரவரி 28,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழகங்களின் சார்பில் தயார் செய்யப்பட்டிருக்கும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனங்களின் சாவிகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் புரட்சிகரமான எண்ணற்ற