பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

திங்கள் , பெப்ரவரி 22,2016, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.   இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்ட  அறிக்கை வருமாறு: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் அளவுகோலாகக் கொண்டு அளப்பது அல்ல. வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும், அதிலும் குறிப்பாக, பெண்களை சென்றடைய வேண்டும். உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் பெண்கள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, தே.மு.தி.க.விலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று  பதவி விலகியுள்ளதையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழப்பதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அறிவித்துள்ளது.  தே.மு.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தே.மு.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால், சட்டமன்றப் பேரவை விதி 2ஓ-வின்படி, எதிர்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை திரு. விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு!

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  இதையொட்டி, முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய்து வருகிறது. இதற்காக 77670 20002 மற்றும் 044 331 24234 ஆகிய சிறப்பு தொலைபேசி

போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, இன்று (21-ம் தேதி) முதல் போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”சட்டம் – ஒழுங்கைப் பராமரித்து, பொது அமைதியை நிலவச் செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தல், குற்றங்கள் நிகழும் போது விஞ்ஞான ரீதியான புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைப் பெற்றுத் தருதல் என பல்வேறு இன்றியமையாப் பணிகளை

5 ஆண்டுகளில் ஆயிரத்து 599 பாலங்களை திறந்துவைத்துள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா – சட்டப்பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமி தகவல்

5 ஆண்டுகளில் ஆயிரத்து 599 பாலங்களை திறந்துவைத்துள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா – சட்டப்பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமி தகவல்

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, முந்தைய தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியைவிட, நீதித்துறைக்கு 451 கோடி ரூபாய் அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 602 கோடி ரூபாய் மதிப்பில் 15,313 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில், உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, கடந்த 5 ஆண்டுகாலத்தில், ஆயிரத்து

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  பாராட்டு

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் நிதியுதவி, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  பல்வேறு கட்சியை சேர்ந்த செ.கு.தமிழரசன்( குடியரசு) தனியரசு,( கொங்கு இளைஞர் பேரவை) கதிரவன்,( பார்வர்டு பிளாக்) நாராயணன்,( சமத்துவ மக்கள் கட்சி) ராமசாமி ( புதிய தமிழகம்

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நிறைவு பெற்றதையொட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த அவர், ‘‘இந்த 14-வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் முதல்வர் என்ற முறையில் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல நேரங்களில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதன் விவரம்: கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும் மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின்-பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை

மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும்: முதல்வர் ஜெயலலிதா

மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும்: முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் ஆயிரம் பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என்பது 40 சதவீதம் என குறைக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பெற நிபந்தனைகள் தளர்த்தப்படும்  என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்கவும் ஆலோசனை கூறவும் சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத் துறைக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.  எனவே தான் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.  சாகுபடி பரப்பினை அதிகரித்தல்,  விவசாயத்தில் புதிய