வியாழக்கிழமை, ஜனவரி 21, 2016, ஜல்லிகட்டு மீதான தடை என்பது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜல்லிகட்டு நடத்தப்படுவதற்காக அரசாணை வெளியிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டதாகக் கூறினார். மேலும், உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக தான் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் ஜல்லிகட்டிற்கு தடை விதிக்க முழு காரணமுமே தி.மு.க.
வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு உடனே 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு
வியாழன் , ஜனவரி 21,2016, மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் வீடுகளை ஒதுக்கீடு செய்து புனர்வாழ்வு அளித்த முதல்வரை பாராட்டுவதாக ஆளுநர் தெரிவித்தார். இதுகுறித்து புதன்கிழமை ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டும் வகையில் சென்னை உள்பட பிற மாநகரங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 11,344 வீடுகளும், குடிசை மாற்று வாரியம் சார்பில் 45,473 வீடுகளும் அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதியாண்டில்
அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்
வியாழன் , ஜனவரி 21,2016, சென்னை – பாமக நிறுவனர் ராமதாஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் படையாட்சியார் பேரவையின் மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:– பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1980ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கம் என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி அதற்காக பணம் வசூல் செய்தார். வன்னியர் சமுதாயத்திற்காக கோனேரிகுப்பம் என்ற இடத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டுகின்றேன் என
முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது ஆளுநர் ரோசய்யா பாராட்டு
வியாழன் , ஜனவரி 21,2016, மின் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாக ஆளுநர் கே.ரோசய்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:- அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மின் உற்பத்தித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடித்தும், நடுத்தர மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் மாநிலத்தின் மின்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுக் கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
வியாழன் , ஜனவரி 21,2016, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வரும் 25-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்
முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு
வியாழன் , ஜனவரி 21,2016, முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாராட்டு ரோசய்யா தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர் பிரச்னைகளில், முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த ஒருங்கிணைந்த தொடர் முயற்சிகளின் பலனாக, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்திக்கொள்ள தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு, முதலமைச்சரின் பாராட்டத்தக்க வெற்றிகளில் ஒன்று என்றும் ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்
புதன், ஜனவரி 20,2016, தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, ஒரே நாளில் பெய்த பெரும் மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும், வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதமாக மேற்கொண்டது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்
சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் பெருக்கியுள்ளது தமிழக அரசு:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு
புதன், ஜனவரி 20,2016, சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் இந்த அரசு பெருக்கியுள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கவர்னர் உரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:– சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்றடைவதை
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
புதன், ஜனவரி 20,2016, இலங்கை கடற்படை கைது செய்த 6 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த 17-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் 19-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே,
மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா:ஆளுநர் ரோசய்யா பாராட்டு
புதன், ஜனவரி 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திறமிக்க சீரிய தலைமையின்கீழ், பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அவற்றின்மூலம் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா சட்டப்பேரவையில் பாராட்டினார். தமிழக சட்டப்பேரவையின், 2016-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று மரபுப்படி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, சமூக நலத்திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதன் மூலம், சமூக சமத்துவத்தை ஏற்படுத்தி,