சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின் உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின்  உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, ஜனவரி 13, 2016, மாற்றுத் திறனாளிகளுக்கு சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சி பிரிவு காலிப் பணியிடங்களில் 42 காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் 3 சதவீத காலிப் பணியிடங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவு வழிவகை செய்கிறது. இந்த 3 சதவீதத்தில், ஒரு சதவீதம், பார்வையற்றவர்களுக்கும், 1 சதவீதம் செவித்திறன் இழந்தோருக்கும், 1 சதவீதம் ஊனமுற்றோருக்கும் பிரித்து

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன், ஜனவரி 13,2016, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிதியுதவி பெற, வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் மு.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயோ சமுத்திரம், கிறிஸ்தவ மதத் தொடர்புடைய புனிதத் தலங்களை உள்ளடக்கிய பயணத்துக்கு

ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

செவ்வாய், ஜனவரி 12,2016, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்த வழிவகை செய்தது –

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள்  எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 12,2016, அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட சென்னையில் 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இதர சேவை களை பெறும் வகையில் சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் இ–சேவை மையங்கள் முதல்-அமைச்சர்

ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 12,2016, ஊட்டியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் இன்ட்கோ சர்வ் மூலம் 1 கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைத்த லாபத்தொகை முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பயனடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதையடுத்து, சிறு குறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி

தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

திருச்சி; தி.மு.க.வில் ‘திடீர்’ கோஷ்டி மோதலையடுத்து, நேரு அலுவலகம் முன்பு முற்றுகை நடந்தது. சிவா எம்.பி. விளம்பர பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகம் தில்லைநகரில் கோட்டை ரெயில்வே நிலையம் சாலையில் உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியில் செல்லாத நேரங்களில் அலுவலகத்திலேயே நேரு தங்கி இருப்பார். ஓய்வெடுப்பதும் அங்கும் தான். இதற்காக அறைகள் தனியாக உள்ளன. இந்த நிலையில் திருச்சி உறையூரில் நேற்று முன்தினம் நடந்த

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், ஜனவரி 12,2016, வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானி சாகர் அணையிலிருந்து 2-ம் பருவ புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை

எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், ஜனவரி 12,2016, அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா – வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2016 ஞாயிற்றுக் கிழமை முதல் 19.1.2016 செவ்வாய்க்

தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

செவ்வாய், ஜனவரி 12,2016, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்– இளம்பெண்கள், மாணவ– மாணவிகளை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழா மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 25 ஆயிரம் இளைஞர்–இளம்பெண்களை அ.தி.மு.க.வில் இணைத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– தமிழகத்தில்

கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாய், ஜனவரி 12,2016, கரும்பு டன்னுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,300 உடன், ரூ.550 சேர்த்து ரூ.2,850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான, ஆதாய விலையைவிட உயர் அளவில் பரிந்துரை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துவருகிறது. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான கரும்பு பருவத்துக்கு டன்னுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின்