தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழு சார்பில், அம்மா சிமெண்ட் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களின் வீடு கட்டும் கனவை நனவாக்கும் விதமாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, குறைந்த விலையிலான தரமான அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 14 கிடங்குகளில், மலிவு விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆவின் தலைவர், பால் கூட்டுறவு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை – கண்காணிப்புக் கோபுரங்கள், CCTV கேமிராக்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான, தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள், C.C.T.V. கேமிராக்கள், கூடுதல் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, இரவு பகலாக தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. தீபாவளி என்றாலே ஆயத்த ஆடைகள், துணி ரகங்கள் வாங்க ஜவுளிக்கடைகளுக்கு செல்லுதல், தள்ளுபடி விலையில் தங்க நகைகள் வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார ஆபரணப்
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள், பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தில் வேளாண்துறையினரின் ஆலோசனையின் பேரில் 800 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் உளுந்து, பாசி மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்த சில நாட்களிலேயே பயிருக்குத் தேவையான நீர் கிடைக்கும் வகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், அரசின் சால்பில் உரம், பூச்சி மருந்து போன்றவை தட்டுப்பாடின்றி வழங்கப்படுவதாலும் பயிர்கள் நல்ல
டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடவடிக்கை – வைரஸ் காய்ச்சலைத் தடுக்க, மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் வைரஸ் காய்ச்சலுக்காக ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விலையில்லா நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் வைரஸ்
தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முன் பதிவு மையங்களில் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு
தீபாவளி திருநாளை தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊரில் கொண்டாட ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நாளை முதல் 9-ம் தேதி வரை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்குப் பின்னர், பொதுமக்கள் திரும்பிச் செல்ல, இதே அளவு பேருந்துகள், வரும் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. தமிழக மக்கள், தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக, நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக, தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள வாய்க்கால்கள் மூலம் பயன்பெறும் பாசன பரப்பிற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தலைஞாயிறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,600 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. கள்ளிமேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை, எளிய மகளிர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் 47 பேருக்கு விலையில்லா கறவை பசுக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி
மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு
வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், சிக்கணாங்குப்பம் மஜ்ரா, திகுவாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் வடிவேல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி, தனது
கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி
கேரளாவில் இன்று 2-வது கட்டமாக, பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில், கடந்த 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ