கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.       கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:‘சர்வசிக் ஷா அபியான்’ எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி, ஏற்கனவே, 65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும்

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வேலூர் மாவட்டம்,சென்னாகுப்பம் கொல்லைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் ராதாகிருஷ்ணன், அரியலூர் வட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள்,நாகப்பட்டினம் மாவட்டம், சிறுதலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மின்கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த அனாதை செட்டி மடத்தைச் சேர்ந்த காவேரி, மகேஸ்வரி, வீரமணி, காஞ்சனா ஆகியோர் காயமடைந்து மருத்துவ மனையில்

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முதுபெரும் திரைப்படப் பாடலாசிரியரும், தமிழறிஞருமான முத்துசாமி படைத்துள்ள பல்வேறு நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாயும், தொடரும் அவரது தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளையும், அரசியல் வெற்றிகளையும் போற்றி `புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்”, “புரட்சித் தலைவி அந்தாதி ஆயிரம்” ஆகிய நூல்களையும், கவிதைகளையும் படைத்துள்ளார். அதிமுக பொதுசெயலாளரும் தமிழக

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில் இருந்து கடந்த 26.9.15 அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திரப் படகில் மீன் பிடிக்க சென்றனர். 29.9.2015 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை

மனித உயிர்களை காத்திட ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும்,

விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . தங்கவேல் என்பவரின் மகன் பாபு 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

குறைந்த விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் விற்பனை நீடிப்பு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக உள்ள காரணத்தால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை மிகக் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  வழங்கப்பட்டு வருகின்றன.  துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  பொது விநியோகத் திட்டத்தின் கீழ்

முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரதிதாசன் பேரன் நன்றி

அறக்கட்டளை தலைவரும் பாரதிதாசன் பேரனுமான பாரதி அறிக்கை: புதுச்சேரி : பாரதிதாசன் பிறந்த நாள், கவிஞர் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பாரதி தாசன் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பிறந்த நாள், இனி ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கவிஞர் நாளாக கொண்டாடப்படும். பாரதிதாசன் 125வது ஆண்டு பிறந்த நாள் விழா, 125 கவிஞர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கவியரங்கம் நடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.இந்த

”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படும்

பெண் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் நடப்பாண்டு முதல் இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாளில் வழங்கப்படும் என்றும், அதன்படி விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தவிர, தரமான பிற மொழி படைப்புகளை சிறந்த மொழியில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர்

பொன்னேரியில் ரூ.13 ஆயிரம் கோடியில் தொழில் முனையம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் தொழில் முனையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி, சென்னை – பெங்களூரு தொழில் வளாகத் திட்டத்தில் உள்ள பொன்னேரி தொழில் முனையம் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் 20 ஆண்டுகளில் 3 கட்டங்களாக மேம்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள 10 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 21 ஆயிரத்து 996 ஏக்கரில் இந்த மையம் அமையும். ரூ.50 கோடியில்