போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017, சென்னை ; சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம் அவரின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்வராகப்

பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது : சசிகலா குற்றச்சாட்டு

பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது : சசிகலா குற்றச்சாட்டு

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017,  சென்னை  ; ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டினார். அதிமுக கழகப்பொதுச்செயலாளர் சசிகலா, போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில்,  ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது குறித்து விளக்கமளித்தார். அப்போது, ”அதிமுகவில் குழப்பம் இல்லை. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னை மிரட்டியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதில் உண்மை

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை : ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை : ஓ.பன்னீர்செல்வம்

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017,  சென்னை ; அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.உங்களை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம் ; பொது செயலாளர் சசிகலா அறிவிப்பு

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம் ; பொது செயலாளர் சசிகலா அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017,  சென்னை : அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருக்கும்  ஓ. பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும்  ஓ. பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.பொருளாளர் பொறுப்பில், வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ள சசிகலா கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு

கட்டாயப்படுத்தியதால் ராஜிநாமா செய்தேன் : ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

கட்டாயப்படுத்தியதால் ராஜிநாமா செய்தேன் : ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017,  சென்னை : என்னை கட்டாயப்படுத்தியதால் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு திடீரென அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். சுமார் 30 நிமிடங்கள் அசையாமல் தியானம் செய்த அவர், 30 நிமிடம்

சசிகலா முதல்வராவதை ஏற்க முடியாது : தீபா பேட்டி

சசிகலா முதல்வராவதை ஏற்க முடியாது : தீபா பேட்டி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 07 , 2017, சென்னை : ஒருவருடன் 33 ஆண்டுகளாக இருந்தது, முதல்வருக்கான தகுதியில்லை. சசிகலா முதல்வராகத் தேர்வானதை ஏற்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது: ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும். நேற்று மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கியது ஏற்றுக்கொள்ளும்படியாகவும், போதுமானதாகவும் இல்லை. இரண்டு மாதங்கள் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தது

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஏற்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஏற்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 07 , 2017, சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள ஆளுநர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பதவியில் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆளுநருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘என் தனிப்பட்ட காரணங்களுக்காக

முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு

முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு

திங்கள், பிப்ரவரி 06 , 2017,  சென்னை : அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று  ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராகிறார். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் பெயரை முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதை வழிமொழிந்தனர். இதைத்

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

திங்கள், பிப்ரவரி 06 , 2017, சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை நேற்று  ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.அதில், ”தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வராக இருந்த காலத்தில் நல் ஆதரவை வழங்கியதற்காக நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்

மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017, சென்னை ; மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய திட்டங்களின் விளைவாக, பள்ளிக்கல்வித்துறையில், தமிழகம் முதலிடம் பெற்று விளங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று  நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். கல்வி மேம்பாட்டுக்கென மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, 3 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதன் விளைவாக தமிழகம் பள்ளிக் கல்வித்துறையில்