முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம்…

முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம்…

செவ்வாய், டிசம்பர் 06,2016,  மக்களுக்காக நான்…மக்களால் நான் என்று அறிவித்து அதன்படியே பொதுவாழ்வில் வாழ்ந்து காட்டியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா, ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த

தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை : முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற

முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

செவ்வாய், டிசம்பர் 06,2016, தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள்விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி இன்று தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை நல்லடக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம்  அருகில் இன்று மாலை நல்லடக்கம்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை

முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்ததும்,குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் : தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது. பிரதமர் மோடி: ஜெயலலிதா மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா: ஏழை,

தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

செவ்வாய், டிசம்பர் 06,2016, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முதல்வரின் மரணச் செய்தியால் தமிழக மக்களும், அவரது கட்சித் தொண்டர்களும் கண்ணீர் கடலில் மூழ்கினர். அ.தி.மு.க.

முதலமைச்சர் ஜெயலலிதா,நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும்,பொதுமக்களும் மனமுருக பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா,நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான  அ.தி.மு.க. தொண்டர்களும்,பொதுமக்களும் மனமுருக பிரார்த்தனை

திங்கள் , டிசம்பர் 05,2016, சென்னை: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கண்ணீருடன் கூடிய பிரார்த்தனையுடன் மருத்துவமனை வாசலிலேயே அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததுமே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை : எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வருகை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை : எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வருகை

திங்கள் , டிசம்பர் 05,2016, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து 4 டாக்டர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா  எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது. அறுவை சிகிச்சைக்குப்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

திங்கள் , டிசம்பர் 05,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் சிகிச்சை அளித்தனர். முதல்வரின் உடல் நிலை குறித்த செய்தி கேள்வி பட்டதும் பொது மக்களும் தொண்டர்களும் அப்பல்லோ முன்பு கவலையுடன் திரண்டனர் . முதல்வர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதற்காக

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஞாயிறு, டிசம்பர் 04,2016, சென்னை ; கடந்த இரண்டு மாதமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , இன்று  மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, சென்னை அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.