சனி, நவம்பர் 26,2016, உடலுறுப்பு தேவைப்படுவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனையில், உடலுறுப்பு தானம் தொடர்பான நிகழ்ச்சி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் J. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் செல்வி அபூர்வா, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக
முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி
சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அவர் கூறியதாவது; அப்பல்லோ மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு
முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ; பிரதாப் சி ரெட்டி தகவல்
வெள்ளி, நவம்பர் 25,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இயல்புநிலைக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார் என்றும்,’ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் தனி வார்டுக்கு
போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
வெள்ளி, நவம்பர் 25,2016, தமிழகத்தில் போலி மருத்துவர்கள் ஒழிப்பில் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறை இணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் உள்ள டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய்மார்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைக்க உதவும் சீமாங்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி, நவம்பர் 25,2016, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி சிறந்த மாணவ-மாணவிகளை உருவாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பாராட்டி தங்க நாணயம் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் கல்வித்தரத்தில் முன்னேற வேண்டும் என்ற
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வெள்ளி, நவம்பர் 25,2016, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, இந்நோய் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பண்ணை பசுமை காய்கறி கடை திட்டம் ; தூத்துக்குடியில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை
வெள்ளி, நவம்பர் 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீர்மிகு திட்டமான பண்ணை பசுமை காய்கறி கடை, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இக்கடை தொடங்கப்பட்டு, 810 நாட்களில், 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏழை-எளியோருக்கு மலிவான விலையில் தரமான பசுமையான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய
“போர்க்குணம் மிக்கவர் முதலமைச்சர் ஜெயலலிதா” ; பிரதமர் மோடி புகழாரம்
வெள்ளி, நவம்பர் 25,2016, புதுதில்லி: மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக எம்பிக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்து அறிந்தார்.அப்போது அவர் முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர். அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு
வியாழன் , நவம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஒன்றியக் கழகம் சார்பில், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 108 தேங்காய் உடைத்து, பெருந்திரளானோர் பிரார்த்தனை நடத்தினர். திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூரில்
முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு
வியாழன் , நவம்பர் 24,2016, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைத்திட, முதல்வர் அறிவித்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு விட்டுள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.