முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திங்கள் , அக்டோபர் 03,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல் நிலை நன்றாக குணமடைந்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பியாலே சென்னை வந்து, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி முதல்வருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குணமடைந்து வரும் முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட பத்திரிகை

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

ஞாயிறு, அக்டோபர் 02,2016, அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு சென்றார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர் ; மக்கள் உற்சாக வரவேற்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர் ; மக்கள் உற்சாக வரவேற்பு

சனி, அக்டோபர் 01,2016, சென்னை  ; முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று  தங்களது பிரச்சாரத்தை துவக்கினர். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள். தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19–ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதி கடந்த 25–ம் தேதி அன்று மாலை அறிவிக்கப்பட்டது. தேர்தல்

முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

சனி, அக்டோபர் 01,2016, அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்கள்?.  நலமாக இருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை.  முதல்வர் உடல் நலம் குறித்து பரவும் வதந்திக்கு யார் காரணம்? தேவையில்லாதவர்கள் வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. நல்ல விஷயத்தை சொல்லலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்க அவர்கள் செய்கிற வேலை. மருத்துவமனை நிர்வாகமே தெளிவாக முதல்வர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல்

வெள்ளி, செப்டம்பர் 30,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 1 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டு வருகிறது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ‛‛உடல் நல குறைவு

தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு அரசியல் சாசன உணர்வை மீறுகிறது ; முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு அரசியல் சாசன உணர்வை  மீறுகிறது ; முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளி, செப்டம்பர் 30,2016, கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட மறுப்பது அரசியல் சாசன உணர்வை வேண்டுமென்றே மீறுவதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ் வாசித்தார். சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுக்கிணங்க கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு மற்றும்

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

வியாழன் , செப்டம்பர் 29,2016, உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய நடிகர் சங்க உறுப்பினர்கள் பிரார்த்திப்பதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம். விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர்

சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

வியாழன் , செப்டம்பர் 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவேரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று காலை நாகை மாவட்டத்தை வந்தடைந்தது. நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளில் உள்ள நீர்தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது. அங்கு, விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மலர்தூவி

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ; 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ; 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்

வியாழன் , செப்டம்பர் 29,2016, சென்னை : மின்வாரியம், போக்குவரத்துக்கழகம், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8400-ம், அதிகபட்சமாக ரூ.16800-ம் கிடைக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 887 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில்; லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்-பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

புதன், செப்டம்பர் 28,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில், அடுத்த மாதம் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பெயர்களை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும்