கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கடந்த 20-ம் தேதிமுதல், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் மற்றும் டெல்டா பகுதிகளில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் இரவு கல்லணை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பா சாகுபடி பணிகளுக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொங்கிவந்த காவேரியை, அமைச்சர்கள், அதிகாரிகள்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் ; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் ; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை 35-வதுவார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேலும் 107 அம்மா உணவகங்கள் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அம்மா உணவகங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டிஜெயக்குமார், ஆணையாளர் தா.கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் பி.வெற்றிவேல், ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஏழைகள் சுகாதாரமான, தரமான உணவு வகைகளை மலிவு விலையில் பெற்று பயனடையும் வகையில்,

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தன் ட்விட்டர்  பக்கத்தில், “அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர், முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் விரைவில் முழு

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதால், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட

வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக் கடிதம்

வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக் கடிதம்

சனி, செப்டம்பர் 24,2016, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் நலம் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக்கடிதம் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மலர்க்கொத்துடன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அன்புள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களே, தாங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய வாழ்த்துச்செய்தியில்,

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் போதுமானதல்ல ; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனுத் தாக்கல்

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் போதுமானதல்ல ; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனுத் தாக்கல்

சனி, செப்டம்பர் 24,2016, புதுடெல்லி  – காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது காவிரி மேற்பார்வைக் குழு. அக்கூட்டத்திலேயே தமிழக அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. இதனிடையே சுப்ரீம்கோர்ட் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.  காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த‌ சுப்ரீம்கோர்ட், ‘த‌மிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல்

முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, தேர்தலில் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ ஏற்படுத்தவும், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் வை-பை எனப்படும் கம்பியில்லா இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும். என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று

திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவியை 50,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவியை 50,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, கிராமப்புற திருக்கோயில்களின் திருப்பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கு திருக்கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும்  நிதி உதவித் தொகையினை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக  உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும் நாகரீகத்தையும் உலகத்திற்கு எடுத்து இயம்பும் சின்னங்களாக விளங்குகிறது. திருக்கோயில்கள் மக்களுக்கு மன அமைதியையும், மன நிறைவையும் அளிக்கின்றன. இத்திருக்கோயில்கள், ஆன்மீகச் சிந்தனையையும், அற உணர்வினையும் சமுதாயத்திற்கு வழங்குவதுடன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சனி, செப்டம்பர் 24,2016, முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளார் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் பூங்கொத்துக்களை அனுப்பி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய செய்தியில், ‘விரைவில் நலம்பெற

முதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை

முதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை

சனி, செப்டம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை