காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது  என்றும், முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. கடந்த 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் கமுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், 200 புதிய பேருந்துகள், 12 ஆயிரத்து 500 பேருக்கு தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு

சனி, செப்டம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடல் நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீரிம்ஸ் சாலை முழுவதும் அதிமுகவினர் குவிந்துள்ளனர். முதலமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வாசல் முன்பு

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்போராட்டங்கள் மூலம் காவேரி நதிநீர் பிரச்னையை சரியாக கையாண்டதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ, காவேரி விவகாரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டங்கள் மூலம் சரியாக கையாண்டதாக குறிப்பிட்டார்.முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திரு. வைகோ பாராட்டும் தெரிவித்தார்  

17 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் : அமைச்சர் இரா.காமராஜ் தகவல்

17 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் : அமைச்சர் இரா.காமராஜ் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை ; இதுவரை 16 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடைபெற்றது.இதில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : கடைசி நாளில் அ தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : கடைசி நாளில் அ தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

வெள்ளி, செப்டம்பர் 23,2016, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப். 22) முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால், கட்சியினர் அதிக ஆர்வத்துடன் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 16-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு இடம் வீதம் தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. சென்னையில் 4

சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016, முதமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டம், உலகில் உள்ள கிறிஸ்துவ நாடுகளில் கூட நிறைவேற்றப்படாத ஒரு முன்னோடித் திட்டம் என கிறிஸ்துவ ஐக்கிய பேரவை தெரிவித்துள்ளது. கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புணரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை அண்மையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். உலகில் உள்ள கிறிஸ்துவ

ஏழை மாணவி கலைவாணியின் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதல்வர் ஜெயலலிதா ; முதலமைச்சருக்கு,மாணவி கலைவாணி நன்றி

ஏழை மாணவி கலைவாணியின் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதல்வர் ஜெயலலிதா ; முதலமைச்சருக்கு,மாணவி கலைவாணி நன்றி

வெள்ளி, செப்டம்பர் 23,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, வட சென்னை மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவி கலைவாணியின் ஏழ்மை நிலையை அறிந்து, அவரது பிசியோதெரபி படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயை கலைவாணியிடம் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள வட சென்னை மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, புதுவண்ணாரப்பேட்டையைச்

கமுதியில் ரூ.4,536 கோடியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் – முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கமுதியில் ரூ.4,536 கோடியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் – முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை : ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ.4,536 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; முதலமைச்சர் ஜெயலலிதா 21-ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) லிமிடெட் நிறுவனத்தால் 4536 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்கள் : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்கள் : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்களை முதல்வர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணனிடம் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், மருத்துவக் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய்