சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை  ; தமிழக சட்டபேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்ட மசோதாக்களை கிழித்தெறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர், தி.மு.க.வினரின் இந்த செயலுக்கு சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக சட்டபேரவையில் பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 முக்கிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் காவலர் வீடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர்

கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது

கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை ; சிறுவாணி ஆற்றின் குறுக்கே செயல்படுத்தப்பட்டுள்ள கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கிவிட்டது. சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை – தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் நேற்று பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. வித்யாசாகர் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தமிழகத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டி ஆளுநர்

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு

சனி, செப்டம்பர் 03,2016, அரசு பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 9 மாதங்களாக நீட்டித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 2-வது நாளாக மண்டல ஊடக ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட புத்தகத் தொகுப்பை மத்திய அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சங்கங்கள்

போக்குவரத்து துறையில் 1600 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

போக்குவரத்து துறையில் 1600 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 200 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1,600 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் நேற்று  முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த   அறிக்கை வருமாறு:- மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், சாலைப் போக்குவரத்து

சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை

சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சட்டசபையில் நேற்று வருவாய்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி பேசினார். அவர் பட்டாக்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், அம்மா திட்ட முகாம் மூலம் எந்தவிதமான பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கீட்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ‘இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். இந்த

நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின் Festival of Globe அமைப்பு வழங்கியது

நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின்  Festival of Globe அமைப்பு வழங்கியது

வெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு “மக்கள் தலைவர்” என்ற பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சிலிக்கான் வேலி என்ற இடத்தில் கடந்த மாதம் 13, 14-ம் தேதிகளில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ரமேஷ் ஜப்ரா நிறுவிய Festival of Globe அமைப்பின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவரது மக்கள் நலத்திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றுக்காக

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 02,2016, இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு.R.B.உதயகுமார் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று  வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் திரு.R.B.உதயகுமார், இணையவழி பட்டா வழக்கும் திட்டத்தின்மூலம் இதுவரை 8 லட்சம் பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வகையில், வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கொண்டுசென்று

அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது

வெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அரியலூரில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஆதரவற்ற மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்துவரும் 42

மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 02,2016, திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் 301-வது பிறந்த நாளையொட்டி, நேற்று நெற்கட்டும்செவல் கிராமத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு.G.பாஸ்கரன், திருமதி V.M. ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு. கருணாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.