திங்கள் , ஆகஸ்ட் 22,2016, சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்தில் பலியான 14 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பண்ருட்டி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த துரை, கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த மோகன்தாஸ், சங்கரன்கோவில் போக்குவரத்துப் பிரிவு காவல்
பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சீனிவாசன் குடும்பத்தினர் நன்றி
ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016, சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது நின்று தவறி விழுந்து உயிரிழந்த கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, 3 லட்சம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட சீனிவாசனின் மனைவி காமாட்சி, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார். கடந்த மாதம் 29-ம் தேதி வாணியம்பாடி வட்டம் புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சித்தூர் மாவட்டம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் சாக்ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016, சென்னை:ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாக்ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் மனதுவைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்மிண்டன்
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு,உணவுப்பொருட்கள் பதுக்கலை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு.ஹேம் பாண்டே பாராட்டு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலை தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் பின்பற்ற வேண்டுமென, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், அனைத்து மாநிலங்களின் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு.ஹேம் பாண்டே,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உறுதியான,
இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் பேட்டி
சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, ஈழத்தமிழர்களின் உரிமையையும், நலன்களையும் நிலைநாட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஈழத்தமிழர்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன், செய்தியாளர்களிடம் பேசியபோது,
உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் கூறினார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை மீது சட்டசபையில் நடந்த விவாதத்தின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் விஜயபாஸ்கர் பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்; மருத்துவ உலகில் மிக முக்கியமான மைல்கல்லாக விளங்குவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகும். பிற மாநிலங்களெல்லாம் பின்பற்றக்
மக்களின் வரிப்பணத்தை வீணடித்த தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்ய முடியாது : சபாநாயகர் தனபால் திட்டவட்டம்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, சட்டப்பேரவையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பேரவைத் தலைவர் மன்றாடிக் கேட்டுக்கொண்டும், அதற்கு செவிமடுக்காமல், அவையை நடத்த விடாமல் மக்களின் வரிப்பணத்தை தி.மு.க. உறுப்பினர்கள் வீணடித்தனர். எனவே, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் தனபால் மீண்டும் மறுத்துவிட்டார். தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையை தொடர்ந்து நடத்தவிடாமல் இடையூறு செய்ததோடு, பேரவைத் தலைவரை ஒருமையில் பேசியும், பேரவைக்குள் அமர்ந்துகொண்டு விதிமுறைகளுக்கு புறம்பாக கேலி செய்யும் சைகைகளை காண்பித்தும், அராஜக செயலில் ஈடுபட்டனர். மக்களின்
சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்,நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2000 ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, சென்னை : காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால் நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்றும், விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை ; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று அவர் கூறியதாவது; முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3,221 கோடியில் 15,56,641 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகள் ஈட்டியத் தொகை
கர்நாடக அரசு மேகதாது தடுப்பணையை கட்ட முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா உறுதி
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016, சென்னை : காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றப் போவதாக