வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.வெல்லமண்டி என்.நடராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் திரு.சி.த.செல்லபாண்டியன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.K.R.P.பிரபாகரன்
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, தமிழ் நாட்டில் உள்ள 1,161 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டும், 1–4–2016 முதல் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று
திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக்கழகச் புதிய செயலாளர்கள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக்கழகச் செயலாளர்களை நியமித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், திருச்சி மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ஆர்.மனோகரன், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக அப்பொறுப்பில் திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.வெல்லமண்டி என்.நடராஜன் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக 12 லட்சத்து 33 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்
வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் உட்பட ஏழை எளிய மக்களுக்காக, 12 லட்சத்து 33 ஆயிரத்து 262 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று , வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி, கடந்த 5 ஆண்டுகளில், முதலமைச்சர்
சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் ; சபாநாயகர் தனபால் நடவடிக்கை
வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, தமிழக சட்டப்பேரவையை நடத்தவிடாமல், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வரும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு அ. தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் பேசினார்.
அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதன் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை
புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, சென்னை: அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதனை நீக்கி, கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதனுக்கு பதிலாக செல்லபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு பதில் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, முதல்போக பாசனத்திற்கு, இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும்
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 போலீசார் உட்பட 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, சென்னை : உடல் நலக்குறைவு, சாலை விபத்தில் பலியான 19 போலீசார் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 27.4.2016 அன்று சென்னை பெருநகர காவல் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த எம்.பழனி, 28.4.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப்
நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016, சென்னை:அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் தாய் திருநாட்டின் வளர்ச்சிக்காக நம் கடமையை உணர்ந்து, அனைவரும்அயராது பாடுபட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 70-வது சுதந்திர தினவிழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச்செய்தி வருமாறு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மண்ணிலிருந்து
சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016, கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா நேற்று திங்கள்கிழமை ஏற்றி வைத்தார். மேலும், சாதனையாளர்களுக்கு பல்வேறு விருதுகளையும் அவர் அளித்தார். 70-ஆவது சுதந்திர தினவிழா தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காக, காலை 9 மணியளவில் அவர் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற