புதன், ஆகஸ்ட் 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதிக்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 17 சாயப்பட்டறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வினா ஒன்றுக்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், திருப்பூரில் நெசவுத்தொழில்
ரூ.4,126 கோடியில் புதிய மின்திட்டங்கள் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
புதன், ஆகஸ்ட் 10,2016, தமிழகத்தில் ரூ.4,126 கோடியில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வருமாறு., தமிழகத்தில் நீண்ட கால, நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் பெறப்படும் மின்சாரம், மத்திய அரசின் மின்திட்டங்களிலிருந்து தமிழக அரசுக்கான பங்கு, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றால் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 8,432.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகப் பெறப்படுகிறது. தரமான மின்சாரம் பெறும்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2,481 தமிழக மீனவர்களை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா ; சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
செவ்வாய், ஆகஸ்ட் 09,2016, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 2,481 மீனவர்களை முதல்வர் ஜெயலலிதா மீட்டார் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சட்டசபையில் மீன் வளம், பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மதிவாணன் (திமு.க.) பேசினார். அப்போது அவர் மீனவர்கள் பிரச்சினை குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை
ரூ.30¼ கோடி செலவில் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மைய இணையதளம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
திங்கள் , ஆகஸ்ட் 08,2016, சென்னை ; ரூ.30 கோடியே 25 லட்சம் செலவில் மாநில அளவிலான குடிமக்கள் தரவுகள் மின்னாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மைய இணையதள பயன்பாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; கடந்த 2013ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் உரையில், தேசிய மக்கள் தொகைப் பதிவு ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு, ஆதார்
வீ டுகளுக்கு இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
திங்கள் , ஆகஸ்ட் 08,2016, சென்னை : 242 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 23 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு பெறும் சேவையயும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு
உலக பள்ளி தடகள போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ – மாணவிகளுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத் தொகை : முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி பாராட்டு
ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, சென்னை: உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும், உலக மாற்றுத் திறனாளர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் 4-வது முறையாக முதலிடம் பெற்ற திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திகுறிப்பு வருமாறு., அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும்
அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி, தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் உற்பத்தியிலும் ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக கைத்தறி முக்கியப் பங்கு வகிக்கிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும்,
ரேணிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, ஆந்திர சிறையிலுள்ள 32 தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும், அப்பாவித் தமிழர்களை விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இரண்டு வழக்குரைஞர்களையும் அவர் நியமித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்களை சேர்ந்த 32 அப்பாவி தமிழர்கள்
வீராணம் திட்டத்தை கொண்டு வரும் துணிவில்லாதது ஏன் ? சட்டசபையில் தி.மு.க.,வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி
சனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:வீராணம் திட்டத்தை கையில் எடுக்க தி.மு.க.வுக்கு துணிவு இல்லை என்றும், புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க உறுப்பினர் மா.சுப்ரமணியம் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தி.மு.கவுக்கு அளித்த பதிலடி கொடுத்தார். அதன் விபரம் வருமாறு., தி.மு.க. எதிர்க்கட்சி உறுப்பினர் பேசுகின்றபோது, திட்டங்களை ஆரம்பிப்பதைப் பற்றியும், அவை முடிப்பதைப் பற்றியும் பேசினார்கள். இதில்
கோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சனி, ஆகஸ்ட் 06,2016, கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டு இரு சேமிப்புக் கிடங்குகள் ரூ.40 கோடியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:- சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கிடங்குகள் அமைப்பதற்கு அதிமுக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு