Coimbatore (North) (State Assembly Constituency)
Tamil Nadu Assembly Election 2016 Results
Candidate | Party | Symbol | No. of Votes |
Arun Kumar | ADMK | 77,540 | |
Meena | DMK | 69,816 | |
Kannan | BJP | 16,741 | |
Murugan | DMDK | 12,153 |
AIADMK MLA MR. Arun Kumar
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் வெற்றி
வியாழன், மே 19,2016,
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் மீனா லோகுவை தோற்கடித்தார். அருண்குமார் 76 ஆயிரத்து 454 வாக்குகளும், மீனாலோகு 69 ஆயிரத்து 745 வாக்குகளும் பெற்றனர். இதேபோல பாஜக வேட்பாளர் கண்ணன் என்ற தேவராஜ் (16 ஆயிரத்து702 ) மூன்றாவது இடத்தையும், தேமுதிக வேட்பாளர் (12 ஆயிரத்து 124) 4 வது இடத்தையும் பிடித்தனர்.
Ariyalur (State Assembly Constituency)
Coimbatore East is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It covers parts of Coimbatore. Coimbatore East assembly constituency is a part of the Coimbatore parliamentary constituency. In 2009, it was renamed as Coimbatore North. Coimbatore (North) will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.
Total Voters:
Male | 1,36,094 |
Female: | 1,32,434 |
Transgender | 0 |
Total | 2,68,528 voters |
AIADMKCandidate for Coimbatore (North) Assembly Election 2016 – Mr. Arun Kumar
சுண்டப்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 14,2016,
கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சுண்டப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியது:
விவசாய கடன் ரத்து, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் வளர்ச்சியில் தமிழகம் சிகரத்தைத் தொட மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் கணபதி, ரத்தினபுரி பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.
இதில், கோவை மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், மேயர் ப.ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், சரோஜினி, மார்க்கெட் சுப்பிரமணி, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 12,2016,
வீரகேரளம் பகுதியில் கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தியது. கெயில், மீத்தேன் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக போராடியது என முதல்வரின் நடவடிக்கைகளால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அதிமுக வெற்றி பெற்றதும் விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்றார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அருண்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், மேயர் கணபதி ப.ராஜ்குமார், பகுதி அதிமுக செயலாளர் ஜி.கே.சண்முகம், வடக்கு மண்டலத் தலைவர் நடராஜன், வார்டு செயலாளர் பாரதி நகர் நாகராஜ், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாரை ஆதரித்து ஆர்.சரத்குமார் பேச்சு
ஏப்ரல் 27, 2016
அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்து செயல்படும் ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்று கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசினார்.
ஆர்.சரத்குமார் வாக்கு சேகரிப்பு
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கோவை வந்தார்.
பின்னர் அவர் நேற்று இரவில் தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து செல்வபுரத்திலும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாரை ஆதரித்து கணபதியிலும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜூனனை ஆதரித்து உக்கடத்திலும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பல திட்டங்கள்
தமிழகத்தில் 5 ஆண்டு காலத்தில் பல திட்டங்களை தீட்டி, அந்த திட்டங்களை செயல்படுத்திய முதல்–அமைச்சர் என்றால் அது ஜெயலலிதாதான். இந்த தேர்தலில் பல கூட்டணிகள் உள்ளன. யாருமே முதல்வர் வேட்பாளர் இல்லை. அதை ஆணித்தரமாக சொல்லலாம்.
தி.மு.க.வில் முதல்–அமைச்சர் வேட்பாளர் கருணாநிதியா அல்லது ஸ்டாலினா என்று குழப்பம் நீடித்து வருகிறது. கூடா நட்பு கேடில் முடியும் என்பதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக கருணாநிதி கூறினார். இப்போது அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைத்து உள்ளனர். எனவே கூடா நட்பு கேடாகதான் முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
அநாகரீக பேச்சு
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ஈவி.கே.எஸ். இளங்கோவன், நாகரீக அரசியல்வாதி இல்லை. தனிநபர் விமர்சகனாக, தனி நபரை பற்றி அனாவசிய வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவர் முதல்வரை பற்றி அநாகரீகமாக பேசி உள்ளார். அவருக்கு ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உங்கள் தாயாருக்கு இறுதிவரை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறப்பான பதவி கொடுத்தார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. எனவே அநாகரீகமான அரசியலை பேசுவதை நிறுத்திக்கொண்டு கொள்கைகள் என்ன என்பதை பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும்.
விஜயகாந்த்துக்கு திறமை இல்லை
மக்கள் நலக்கூட்டணியின் முதல்–அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்துக்கு திறமை, ஆற்றல், தொலை நோக்கு சிந்தனை, ஆளுமை தன்மை இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் எப்படி நடந்து கொள்கிறார்? பொது வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியாது.
மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியது வைகோதான். ஆனால் வேடிக்கை என்ன என்றால் விஜயகாந்த் போன்று வைகோவும் இப்போது கோபப்படுகிறார்.
வைகோவுக்கு தோல்வி பயம்
தனது தொகுதியில் தி.மு.க. சாதி கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் நான் தேர்தலில் நிற்கவில்லை என்று வைகோ கூறி உள்ளார். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் கூறி வருகிறார். ஆதாரம் இருந்தால் தேர்தல் கமிஷனிடம் கொடுக்க வேண்டியதுதானே. தோல்வி பயம் அவரை கவ்விக்கொண்டது. இதனால்தான் அவர் போட்டியிடவில்லை.
தமிழகத்தை வழிநடத்தும் சக்தி ஜெயலலிதாவுக்குதான் இருக்கிறது. 2025–ல் அதிக இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. எனவே அந்த இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த தேர்தலில் 70 லட்சம் முதல் 1 கோடி வரை புதிய வாக்காளர்களாக இளைஞர்கள் உள்ளனர்.
மக்களின் நலன் காக்கும் அரசு
இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க போகிறார்கள். எனவே இளைஞர்கள் அனை வரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மாணவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன் காக்கும் அரசாக ஜெயலலிதாவின் அரசு இருந்தது.
எனவே இளைஞர் சமுதாயம் வாழ்வாதார அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும் என்றால் வேலை, வேலைக்கேற்ற ஊதியம், கல்விக்கேற்ற வேலை என்ற அடிப்படையில் வருங்காலம் இளைஞர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சியை ஜெயலலிதாவால் மட்டுமே கொடுக்க முடியும்.
அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
தி.மு.க. பதவியைவிட்டு இறங்கும்போது 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் தேவைப்பட்டது. அதில் பற்றாக்குறை இருந்ததால் 10 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது 15 ஆயிரத்து 451 மெகாவாட் மின்சாரம் தேவை. அதையும் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக மாற்றிய திறமை ஜெயலலிதாவையே சாரும்.
சிறந்த ஒரு ஆட்சி தொலைநோக்கு சிந்தனை, இந்த தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து, திட்டங்களை தீட்டி செயல்பட்டு வரும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். எனவே முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர நீங்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.சரத்குமார் பேசினார்.
முன்னதாக அவர் மேட்டுப்பாளையத்தில் வேட்பாளர் ஓ.கே.சின்னராஜை ஆதரித்து காரமடையிலும், கவுண்டம்பாளையம் வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டியை ஆதரித்து துடியலூரிலும் வாக்குகளை சேகரித்தார்.
Ex-AIADMK MLA Mr. Malaravan T.
Father Name | THAYUMANAVAR |
Party | AIADMK |
Education | S.S.L.C. |
Occupation | Agriculture and Cracker Business |
Date of Birth | 06th – May – 1949 |
Marital Status | Married; Two Children |
Address | 16A/1, Bharathi Nagar, 4th Cross, Ganapathy, |
Coimbatore-641 006 | |
Telephone | 044-25366222, 0422-2513996 |
+91 – 9443747177 | |
mlacoimbatorenorth@tn.gov.in |
Legislative Assembly Election Results
Assembly | Duration | Winner | Party | Votes |
Fifteenth | 2016- | Arun Kumar | AIADMK | 77,540 |
Fourteenth | 2011-2016 | Malaravan T. | AIADMK | 93276 |
History of Coimbatore District
Coimbatore, also known as Kovai, is a major city in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the state after Chennai and the sixteenth largest urban agglomeration in India. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.
It is one of the fastest growing tier-II cities in India and a major textile, industrial, commercial, educational, information technology, healthcare and manufacturing hub of Tamil Nadu. It is often referred to as the “Manchester of South India” due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as “Pump City” and it supplies two thirds of India’s requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with “Coimbatore Wet Grinder” and “Kovai Cora Cotton” recognized as Geographical Indications by the Government of India. The city is located on the banks of Noyyal river surrounded by the Western Ghats.
Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola.
Area Sq. Km: | 4,732 |
Chennai Population:
Male: | 1,729,297 |
Female: | 1,728,748 |
Total: | 3,458,045 |
Literacy Rates
Male: | 89.06% |
Female: | 78.92% |
Total: | 83.98% |