Tambaram

Tambaram is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,87,337
Female: 1,85,520
Transgender 0
Total 3,72,883

AIADMKCandidate for Tambaram Assembly Election 2016 – Mr. Chitlapakkam S Rajendran

AIADMK Candidate for Tambaram Assembly Election 2016 - Mr. Chitlapakkam S Rajendran

தாம்பரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்புமே 02,2016 ,

தாம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் தனது தொகுதியில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாடம்பாக்கம் பேரூராட்சியில் பல்வேறு நகர்நலச் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிக்க தங்கள் பகுதிக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை உற்சாகத்துடன் வரவேற்ற அப்பகுதி மக்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தங்கள் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதிய தார் சாலைகள் வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாடம்பாக்கம் பேரூராட்சி தலைவர் விமலா லோகநாதன் நிறைவேற்றித் தந்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்தனர்.

தங்கள் பகுதிக்கு கூடுதலாக மினி பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ஷளப்படும் என்றார் அவர்.

வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் எம்.கே.கோவிந்தன், மாடம்பாக்கம் தலைவர் விமலா ஸ்ரீகாந்த், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் ஆர்.மோகன், காசிராஜன், முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

அவருடன் தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், நகரச் செயலாளர் எம்.கூத்தன், நகர்மன்ற துணை தலைவர் ஏ.கோபிநாதன், கவுன்சிலர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, நாகூர்கனி, மார்க்கெட் பாபு, ஏ.அப்துல் மஜீத், ஸ்டார் பிரபா, தஞ்சை எஸ்.மணி, எஸ்.மாரி உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

 

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்கு சேகரிப்பு

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்கு சேகரிப்புமே 01,2016 ,

பெண்களுக்கு முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை கூறி, தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார்.

 கிழக்கு தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி பின்புறம் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கவுன்சிலர்களுடன் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
 பெண்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அனைவரும் பயன்பெறும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியுள்ளார்.

 கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, திருமணமான பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
 பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ,மாணவிகளின் அவசியத் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். எனவே, வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அவர்.

 வாக்குசேகரிப்பின்போது, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகர அதிமுக செயலாளர் எம்.கூத்தன், நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், கவுன்சிலர்கள் நாகூர்கனி, எல்லார் செழியன், எம்.கிருஷ்ணமூர்த்தி, மஜீத்,கோட்டைசாமி, சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் ஆர்.மோகன், முரளி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பிரசாரம்

சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பிரசாரம்ஏப்ரல் 30,2016 ,

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மேற்கு தாம்பரத்தில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 மேற்கு தாம்பரம் 30,31,33,37 ஆகிய வார்டுகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு கல்யாண் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் வரவேற்பு அளித்தனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் ராஜேந்திரன் வழங்கி வாக்கு சேகரித்தார்.
 மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகரச் செயலர் எம்.கூத்தன், நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், சிட்லபாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர்.மோகன், கவுன்சிலர்கள் நாகூர்கனி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தாம்பரம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு

தாம்பரம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்புஏப்ரல் 28,2016 ,

தாம்பரம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பெருங்களத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

 தேர்தல் பிரசார வாகனத்தில் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனுடன் சென்ற நடிகர் பொன்னம்பலம் பேசியதாவது:
 தமிழகத்தின் தனிப்பெரும் ஆற்றல் மிக்க தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார்.

 அவர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகளை அனைவரும் நன்கு அறிவீர்கள்.
 அவரது ஆட்சியில் அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
 காவிரி நீர், முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத் தந்து சாதனை நிகழ்த்திய தனிப்பெரும் தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் அ.தி.மு.க.ஆட்சி மீண்டும் தமிழகத்தில் தொடர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
 முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனுக்கு, எம்.ஜி.ஆர். தந்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நடிகர் பொன்னம்பலம் கேட்டுக் கொண்டார்.
 நடிகர் பொன்னம்பலத்துடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அ.தி.மு.க.நிர்வாகிகள் பி.ஹரிகரன், பி.விஷ்ணு, பச்சையப்பன், எல்லப்பன், பீட்டர், நாகராஜ், உதயா, சத்யபிரகாஷ், ஆனந்தன், நாராயணன், ஜெயசங்கர், முருகன், சீனிவாசன் ஆகியோர் உடன் வாக்கு சேகரித்தனர்.

 

பெருங்களத்தூரில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

பெருங்களத்தூரில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்புஏப்ரல் 27,2016,

பெருங்களத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பார்வதி நகர், பத்மாவதி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வாக்குகளை அவர் சேகரித்தார்.

அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பேரூர் செயலர் ஹரிகரன், நிர்வாகிகள் டி.ஆர்.பாண்டியன், டி.ஆர்.எல்லப்பன், உதயகுமார், பச்சையப்பன், கவுன்சிலர்கள் ஹேமலதா, பிரேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்

கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்ஏப்ரல் 25,2016,

தாம்பரம்,மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள 68-க்கும் மேற்பட்ட நகர் நலச் சங்க பிரதிநிதிகள்,குடும்பத் தலைவிகளிடம் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

தாம்பரம் தொகுதியில் உள்ள நகர்நலச்சங்க பிரதிநிதிகளை அவர் சந்தித்து, இரட்டை இலைக்கு வாக்களித்து தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் தாம்பரம் நகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள சாலை வசதி, தெரு விளக்குகள் பராமரிப்பு,மழைநீர் வடிகால்,குப்பை அகற்றும் நடவடிக்கை,புதிய பூங்காக்கள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விவரித்தார்.

நகர்நலச் சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான வசதிகள், குறைகள் குறித்து மனு கொடுத்தால் உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

மாடம்பாக்கத்தில் சாந்தினிகேசன் நகர், சுதர்சன் நகர், ஆதித்யா நகர், ஷிரிடி சாய் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகர்நலச் சங்க பிரதிநிதிகள், குடும்பத் தலைவிகளை நேரில் சந்தித்து வாக்கு கேட்டார். அந்தப் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரியை தூர்வாரி குடிநீர் ஆதாரத்தை பெருக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தாமஸ்மலை ஒன்றியக் குழுத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், மாடம்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர் விமலா, தொகுதி அதிமுக இணைச் செயலர் லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்புஏப்ரல் 21, 2016,

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள், பயணிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்தார். “”மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற லட்சியத்துடன் தமிழக மக்கள் நலனுக்காக நாளும் உழைத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு உங்கள் நல்லாதரவை அளிக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரித்தார்.
 முன்னாள் அமைச்சரும் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏவுமான டி.கே.எம்.சின்னையா, தாம்பரம் நகரமன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், கவுன்சிலர்கள் எல்லார்.செழியன், சாய்கணேஷ், அப்துல் மஜீத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

 

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அரசின் திட்டங்கள்: தாம்பரத்தில் வாக்கு சேகரிப்பின்போது அதிமுக வேட்பாளர் பேச்சு

விளையாட்டு மைதானத்தில் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் ஏப்ரல் 20, 2016,

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களால் தொடர்ந்து பயன் அடைந்து வருகின்றன என்றும் அவரது ஆட்சி தொடர தவறாமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் கூறினார்.

 கிழக்கு தாம்பரம் ரயில்வே விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தோரிடம் வாக்கு சேகரித்தபோது, அவர் மேற்கண்டவாறு பேசினார்.

 வாக்கு சேகரிப்பில் அவர் மேலும் பேசியதாவது:-

 கடந்த 5 ஆண்டு காலத்தில் எண்ணற்ற சாதனைகள், திட்டங்கள், நன்மைகளை முதல்வர் செய்துள்ளார். நாட்டில் துணிச்சல் மிக்க அரசியல் தலைவராக ஜெயலலிதா திகழ்கிறார். இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு, சட்டப் பேரவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கை, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதம், விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை யாராலும் செய்ய முடியாதது.

 கருவில் இருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

 முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகரச் செயலர் கூத்தன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் எல்.ஆர்.செழியன், கிருஷ்ணமூர்த்தி,சாய்கணேஷ், சிட்லப்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- T. K. M. Chinneyah AIADMK 91702
Thirteenth 2006-2011 Raja, S.R DMK 269717
Twelfth 2001-06 Vaidialingam M.A. DMK 150961
Eleventh 1996-01 Vaidyalingam, M.A. DMK 166401
Tenth 1991-96 S.M. Krishnan INC 111588
Ninth 1989-91 Vaithlyaligam, M.A. DMK 90007
Eighth 1984-89 Ella Rajamanickam ADK 75155
Seventh 1980-84 Pammal Nallathambi DMK 59931
Sixth 1977-80 Munu Adhi ADK 32394

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%