Kulithalai
MLA Mr. A. Pappasundaram
Father Name | Shri Ayyasamy Reddiar |
Party | AIADMK |
Date of Birth | 20th September 1936 |
Place of Birth | Karur |
Marital Status | Married: Four Children. |
Address | Chennai: A2D, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002. |
Mofussil: New No.170, Valaiyapatti, Iranyamangalam Village, Kulithalai Taluk, Karur District-639 107. | |
Telephone | Chennai–Residence: 044-25366110 |
Mobile: +91 9842446046 | |
mlakulithalai@tn.gov.in |
Kulithalai (State Assembly Constituency)
Kulithalai is a state assembly constituency in Tamil Nadu.
Total Voters:
Male: 1,02,649
Female: 1,05,141
Transgender: 2
Total: 2,07,792
அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்
மே 15,2016,
தொகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகரன்.
தொகுதிக்குள்பட்ட குளித்தலை, நெய்தலூர், வதியம் தொகுதியில் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகரன் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில்,அதிமுக ஆட்சி மட்டுமே என்றும் பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் ஆட்சி. சிலர் வேண்டுமென்றே அதிமுக ஆட்சி மீது குறை கூறுகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். பெண்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் இந்த தேர்தலுக்கான வாக்குறுதியில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்துள்ளார்.
குறிப்பாக 50 சதவீத மானியத்தில் மொபெட், ஒரு பவுன் தாலிக்கு தங்கம் என வழங்கவுள்ளார். நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறைக் கொண்ட முதல்வர், மக்களுக்காக நான், மக்களால் நான்,என ஆட்சி செய்து வருகிறார். இவருக்கென இருக்கும் சொந்தம் நீங்கள் தான். என்னை வெற்றிபெறச் செய்தால் தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருந்து, அரசின் நலத்திட்டங்களை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
பிரசாரத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றியச் செயலாளர் விநாயகம், மருதூர் திருநாவுக்கரசு, வதியம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தோகைமலையில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் :அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகரன் வாக்குறுதி
மே 14,2016,
தோகைமலை ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் தூர்வாரப்படும் என்றார் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன்.
தொகுதிக்குட்பட்ட தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தளிஞ்சி கிராமத்தில் வெள்ளிக்கிழமை வீடு, வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் வேட்பாளர் சந்திரசேகரன் பேசுகையில், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். இதில் அதிமுக அமோக வெற்றிபெற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முதல்வர் ஜெயலலிதா 6-வது முறையாக கோட்டைக்குச் செல்வார்.
என்னை வெற்றி பெறச் செய்தால் தோகைமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுப்பேன். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக்கொடுப்பேன் என்றார்.
பிரசாரத்தின்போது ஒன்றியச் செயலர் விஜயன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் தியாகராஜன், நெய்தலூர் ஞானசேகரன், வெங்கடாசலம், ஒன்றியக் கவுன்சிலர் மாரியப்பன், வேலுச்சாமி, முருகேசன், குளித்தலை டாக்டர் தர்மேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடியாகும் :குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர்
மே 13,2016,
அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடியாகும் என்றார் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன்.
குளித்தலை தொகுதிக்குட்பட்ட தோகைமலை ஒன்றியப் பகுதியில் உள்ள புத்தூர், கல்லடை, கள்ளை, எ.நடுப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்காளர்களைச் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் கடந்த முறை தோகைமலை ஒன்றியப் பகுதியில் பெண்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மற்றும் அம்மா திட்ட சிறப்பு முகாம் உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி பலகோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக மகளிருக்கு தாலிக்குத் தங்கம் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள் தொடர குளித்தலை தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
குளித்தலை தொகுதி விவசாயம் நிறைந்த பகுதி. முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகும்போது விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை நம் பகுதியில் முழுமையாகச் செயல்படுத்த நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார்.
பிரசாரத்தின்போது குக்கிராமங்களில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் ஆர். சந்திரசேகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் தோகைமலை ஒன்றியச் செயலர் கே.ஆர். விஜயன், கூட்டுறவு சங்கத் தலைவர் கீழவெளியூர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் மற்றும் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலையை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்:அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன் உறுதி
மே 12,2016,
குளித்தலை தொகுதியை தமிழகத்திலே முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றார் அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன்.
குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன் குளித்தலை அருகே உள்ள நெய்லூர் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியது:
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையைக் கண்டு எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
முதல்வரின் தாலிக்குத் தங்கம் திட்டம், படிப்படியாக மது ஒழிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர். கருத்துக் கணிப்புகளும் அதையேத்தான் சொல்கின்றன. இந்த தொகுதியில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் முதன்மை தொகுதியாக குளித்தலை தொகுதியை மாற்றி காட்டுவேன் என்றார்.
ஒன்றியக் குழு துணைத் தலைவர் தியாகராஜன், நெய்தலூர் முன்னாள் ஒன்றியகுழு கவுன்சிலர் ஞானசேகரன், நெய்லூர் வெங்கடாசலம், திருநாவுக்கரசு, டாக்டர் தர்மேந்திரன், வதியம் ஊராட்சித் தலைவர் ரதிசண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 11,2016,
தோகைமலை ஒன்றியப் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குளித்தலை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகரன் தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர், கள்ளை, கல்லடை உள்பட 65-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
இதுதவிர ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் செல்போன், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தில் 8 கிராம் தங்கம், மானியத்தில் மகளிருக்கு ஸ்கூட்டர், கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவால் மட்டுமே கொடுத்த வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்ற முடியும். கடந்த 5 ஆண்டுகளில் சொன்னதைத் தவிர, சொல்லாத நலத் திட்டங்களையும் நமக்கு கொடுத்தார். அவரது பொற்கால ஆட்சி தொடர அதிமுகவை வெற்றிப்பெறச் செய்யுங்கள் என்றார்.
பிரசாரத்தில், தோகைமலை ஒன்றியச் செயலாளர் விஜயன், இளைஞரணி செயலாளர் கருப்பையா, பேரவை ஒன்றியச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வதியம் பகுதியில் குளித்தலை அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 08,2016,
வதியம் பகுதியில் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
குளித்தலை தொகுதிக்குள்பட்ட வதியம் பகுதியில் வாக்குச் சேகரித்த அவர் வாக்காளர்களிடம் கூறுகையில், குளித்தலை தொகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பாடுபடுவேன். மேலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவேன்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அனைத்து நலத் திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
வதியம் ஊராட்சி பகுதியில் வாக்குசேகரித்தபோது அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் ரதி சண்முகம் அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றார்.
பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் விநாயகம், தோகமலை ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர் தியாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்:குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர்
மே 06,2016,
தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றார் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சந்திரசேகர்.
தொகுதிக்குட்பட்ட இனுங்கூர், பனிக்கம்பட்டி, பனிக்கம்பட்டி காலனி, வளையப்பட், எரமநாயக்கன்பட்டி, மேலப்பட்டி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை இரவு வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக எத்தனையோ நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத்தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கினார்.
சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழைத்து குடும்ப வருமானம் உயர வழிவகுத்தவர் முதல்வர். ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் கையில் மட்டுமே தவழ்ந்த மடிக்கணினி இன்று ஏழைக் குழந்தைகளின் கையிலும் தவிழ்கிறது என்றால் இது முதல்வரின் சாதனைதான். படித்த இளைஞர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மட்டுமே அறிவித்த திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றக் கூடியவர். வேறு எந்த ஒரு முதல்வராலும் செய்யாத சாதனையாக சொன்னதையும் செய்துவிட்டு சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்திய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.,
இவரது பொற்கால ஆட்சி மீண்டும் தொடர என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். நான் என்றும் தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார்.
பிரசாரத்தில் எம்எல்ஏ பாப்பாசுந்தரம், ஒன்றியச் செயலர் டி. விநாயகம், மருதூர் பேரூர் செயலர் பனிக்கம்பட்டி பிரகாசம், குளித்தலை ஒன்றியக் குழுத் தலைவர் நளினிகலைமணி, தோகைமலை ஒன்றியச் செயலர் விஜயன், ஒன்றிய இளைஞரணி இணைச் செயலர் கேடி. ரெங்கநாதன், வளையப்பட்டி கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சந்திரசேகரை ஆதரித்து நடிகர் வையாபுரி வாக்கு சேகரிப்பு
மே 05,2016,
தமிழகத்தில் நல்லாட்சி தொடர ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார் நடிகர் வையாபுரி.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.ஆர். சந்திரசேகரை ஆதரித்து குளித்தலை ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்பட்டி, பாறைப்பட்டி, சூரியனூர், குறிச்சி, தென்கரை குறிச்சி, கவுந்தம்பட்டி, மேட்டுமருதூர், வீரம்பூர், மரூதூர், ராஜேந்திரம், தண்ணீர்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் வையாபுரி புதன்கிழமை வாக்கு சேகரித்து பேசியது:
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆடு, மாடு வழங்கினார். மட்டுமல்ல தாலிக்குத் தங்கம் கொடுத்த தங்கத் தாரகையாக தமிழகத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.
பெண்ணாக இருப்பதால், பெண்களின் உயர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி முதல் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறார். தமிழகத்தில் இந்த நல்லாட்சி தொடர ஜெயலலிதாவை 6-வது முறையாக முதல்வராக்குங்கள் என்றார்.
ஒன்றியச் செயலர் டி. விநாயகம், மாவட்ட பொருளாளர் எம்.எஸ். கண்ணதாசன், ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் கேபி. ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளித்தலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு
ஞாயிறு, ஏப்ரல் 10,2016,
குளித்தலை பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் தெருவில் குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளான பேராளகுந்தாளம்மன் கோவில்தெரு, ஆண்டார் மெயின்ரோடு, பஜனைமடம், கடைவீதி, தெப்பக்குளத்தெரு வழியாக பெரியபாலம்வரை சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் குளித்தலை நகர செயலாளர் சோமு.ரவி, ஒன்றிய செயலாளர்கள் விநாயகம், விஜயன், மணி, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Legislative Assembly Election Results
Assembly | Duration | Winner | Party | Votes |
Fourteenth | 2011- | Pappasundaram.A | AIADMK | 87459 |
Thirteenth | 2006-2011 | Manickam.R | DMK | 69615 |
Twelfth | 2001-06 | Pappasundaram.A | ADMK | 66406 |
Eleventh | 1996-01 | R. Selvam | DMK | 60521 |
Tenth | 1991-96 | A. Pappa Sundaram | ADK | 80499 |
Ninth | 1989-91 | A. Papa Sundaram | ADK(JL) | 49231 |
Eighth | 1984-89 | P. Musiri Puppnan | ADK | 62165 |
Seventh | 1980-84 | Karuppaiah, R. | CPI | 44525 |
Sixth | 1977-80 | P.E. Srinivasa Reddiar | INC | 27043 |
Fifth | 1971-77 | Kandaswamy M. | DMK | 44198 |
History of Karur District
One of the ancient cities in Tamil Nadu, Karur was ruled by the Cheras, Cholas, the Naickers, and the British successively. There is proof that Karur may have been the centre for old jewellery-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the “place of the sacred cow.”
Karur has a very long history and has been sung by various sangam poets. In history, it has been the battleground of various Tamil Kings like Chera, Chola, Pandya and Pallavas because of strategic location. The district has a very rich and varied cultural heritage.
Karuvoor Thevar born in Karur is one among the nine devotees who sung the divine Music Thiruvichaippa, which is the ninth Thirumurai. He is the single largest composer among the nine authors of Thiruvichaippa. He lived during the reign of the great Raja Raja Chola-I. In addition to the famous Siva temple, there is a Vishnu temple at Thiruvithuvakkodu, a suburb of Karur, sung by famous Kulasekara Alwar [7-8th century AD] who was the ruler of Kongu nadu. The same temple is presumably mentioned in epic Silappadikaram as Adaha maadam Ranganathar whose blessings Cheran Senguttuvan sought before his north Indian expedition.
Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading centre even in the early Sangam days. Epigraphical, numismatic, archaeological and literary evidences have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. It was called Karuvoor or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings etc. Karur was built on the banks of river Amaravathi which was called Aanporunai during the Sangam days. The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera King Cheran Senguttuvan ruled from Karur. In 150 Greek scholars Ptolemy mentioned “Korevora” (Karur) as a very famous inland trading centre in Tamil Nadu. After the early Cheras, Karur was conquered and ruled by Pandyas followed by Pallavas and later Cholas. Karur was under the rule of Cholas for a long time. Later the Naickers followed by Tipu Sultan also ruled Karur. The British added Karur to their possessions after destroying the Karur Fort during their war against Tipu Sultan in 1783. There is a memorial at Rayanur near Karur for the warriors who lost their lives in the fight against the British in the Anglo-Mysore wars. Thereafter Karur became part of British India and was first part of Coimbatore District and later Tiruchirappalli District.
Karur is also a part of Kongunadu. The history of Kongunadu dates back to the 8th century. The name Kongunadu originated from the term “Kongu”, meaning nectar or honey. Kongu came to be called as Kongunadu with the growth of civilization. The ancient Kongunadu country was made up of various districts and taluks which are currently known as Palani, Dharapuram, Karur, Nammakkal, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Satyamangalam, Nilgiris, Avinashi, Coimbatore, Pollachi and Udumalpet. Kongunadu was blessed with enormous wealth, a pleasant climate and distinct features. Kongunadu was ruled over by the Chera, Chola, Pandya, Hoysala, Muslim rulers and finally the British.
Karur Area:
Area Sq. Km: 2,904
Karur Population:
Male: 528,184
Female: 536,309
Total: 1,064,493
Literacy Rates:
Male: 84.54%
Female: 66.86%
Total: 75.60%